|
(செயல்களைச் முடிக்கும்) திறன் இல்லாதவர், முன்னே எண்ணி வைத்திருந்தும் (செய்யும் போது) குறையானவைகளையேச் செய்வர்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் - செய்யப்படும் வினைகளை முன் அடைவுபட எண்ணி வைத்தும், செய்யுங்கால் அவை முடிவிலவாகவே செய்யாநிற்பர்; திறப்பாடு இலாதவர் - முடித்தற்கு ஏற்ற கூறுபாடு இல்லாதார். (அக்கூறுபாடாவன: வந்த இடையூறுகட்கு ஏற்ற பரிகாரம் அறிந்து செய்தலும், தாம் திண்ணியராதலுமாம். பிழையாமல் எண்ண வல்லராய் வைத்தும் செய்து முடிக்கமாட்டாரும் உளர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் அமைச்சருள் விடப்படுவாரது குற்றம் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
அடைவுபட எண்ணியும் தம்மால் முடிவது இல்லாதவற்றையே செய்யா நிற்பர்; வினை செய்யுந் திறன் இல்லாதார். இஃது எண்ணவல்லாராய் வினை செய்ய மாட்டாரென்று கூறிற்று.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
திறப்பாடு இலாதவர் -வினையைச் செய்து முடிக்கும் திறமையில்லாதவர்; முறைப்படச் சூழ்ந்தும் -செய்யவேண்டிய வினைகளை ஒழுங்குபட எண்ணிவைத்தும் ; முடிவிலவே செய்வர் - செய்யுங்கால் முற்றுப் பெறாதனவாகவே விடுவர். திறப்பாடாவது , வந்த வந்த இடையூற்றை உடனுடன் விலக்குதலும் ஆள் வினையில் உறுதியாயிருத்தலுமாம். 'இலாஅ' இசை நிறையளபெடை. திறப்பாடிலாதவர் பழுதெண்ணுவாரைப்போல் தண்டனைக்குரியவ ரல்லரேனும் விலக்கப் படவேண்டியவரே என்பது கருத்தாம்
|
|
கலைஞர் உரை:
|
|
முறைப்படித் தீட்டப்படும் திட்டங்கள்கூடச் செயல் திறன் இல்லாதவர்களிடம் சிக்கினால் முழுமையாகாமல் முடங்கித்தான் கிடக்கும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
செயல்திறம் இல்லாத அமைச்சர், செய்ய வேண்டியவற்றை முறையாக எண்ணி வைத்திருந்தாலும், அவற்றைச் செய்யும்போது அரைகுறையாகவே செய்வார்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(தப்பான யோசனை சொல்லுகிற மந்திரியால் அபாயம் வந்துவிடும். திறமையில்லாத மந்திரியால் நல்ல காரியமும் கெட்டுப் போகும்.) சரியானபடி ஆராய்ந்து ஆலோசித்திருந்த காரியத்தையும், காரியத் திறமையில்லாத மந்திரிகள் அது முடியாதபடி கெடுத்து விடுவார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
முடிப்பதற்கு ஏற்ற கூறுபாடுகள் அறியாத வர்கள், செய்யப்படும் தொழில்களை முன்பாகவே நன்கு எண்ணி வைத்திருந்தும் செய்யும்போது அவை முடியாத அடியே செய்வார்கள்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நன்றாக ஆய்ந்து நல்ல முடிவுகள் எடுத்தாலும், திறன் வாய்க்கப் பெறாதவர்கள் செயல்படுத்த முனையின் தீமையே விளையும்.
|
|
Translation
|
|
For gain of end desired just counsel nought avails
To minister, when tact in execution fails.
|
|
Explanation
|
|
Those ministers who are destitute of (executive) ability will fail to carry out their projects, although they may have contrived aright.
|
|
Transliteration
|
|
Muraippatach Choozhndhum Mutivilave Seyvar
Thirappaatu Ilaaa Thavar
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|