|
மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்பு முறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தான் காக்கும் கற்பே சிறிந்தது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
மகளிர் சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும் - மகளிரைத் தலைவர் சிறையால் காக்கும் காவல் என்ன பயனைச் செய்யும்? நிறை காக்கும் காப்பே தலை - அவர் தமது நிறையால் காக்கும் காவலே தலையாய காவல். (சிறை : மதிலும், வாயில்காவலும் முதலாயின. நிறை: நெஞ்சைக் கற்பு நெறியில் நிறுத்தல். காவல் இரண்டினும் நிறைக் காவல் இல்வழி ஏனைச் சிறைக்காவலால் பயன் இல்லை என்பார், 'நிறைகாக்கும் காப்பே தலை' என்றார். ஏகாரம் பிரிநிலைக் கண் வந்தது. இதனால் தற்காத்தற் சிறப்புக் கூறப்பட்டது.
|
|
மணக்குடவர் உரை:
|
|
மகளிரைச் சிறைசெய்து காக்குங்காவல் யாதினைச் செய்யும்? அவரது கற்புக் காக்குங் காவலே தலையான காவல்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
சிறைகாக்குங் காப்பு எவன் செய்யும்-பெண்டிரைக் கணவர் சிறைச்சாலையுள் அடைத்துவைத்தாற்போற் காக்குங் காவல் என்ன பயன்படும் ?; நிறை காக்கும் காப்பே தலை -அப்பெண்டிரே தங்கள் கற்பினால் தங்களைக் காத்துக் கொள்ளுதலே தலையாய காவலாம்.
சிறை காப்பாவது இரவும் பகலும் வீட்டைவிட்டு வெளியேறாமற் காவல் செய்தல். நிறை யென்பது மனத்தைக் கற்புநெறியில் நிறுத்துதல். கற்பில்லாத பெண்ணைக் காவல் செய்தல் அரிது என்பது கருத்து. ஏகாரம் பிரிநிலை.
|
|
கலைஞர் உரை:
|
|
தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
இத்தனை குணங்களும் இருக்கும்படி பெண்ணைச் சிறை வைத்துக் காவல் காப்பதில் பயன் என்ன? பெண்கள் தங்களைத் தாங்களே மன அடக்கத்தால் காக்கும் காவலே முதன்மையானது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அவள் தனக்குத்தானே காவல்). பெண்களை வெளியே போகவிடாமல் வீட்டுக்குள்ளேயே சிறை வைத்துக் காக்கின்ற காவல் எதற்காம்? தங்களைத் தாங்களே காத்துக் கொள்ளுகிற அவர்களுடைய கற்புணர்ச்சி தான் அவர்களுக்குச் சிறந்த காவல்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
மகளிரைச் சிறைவைத்துக் காத்தல் என்பது என்ன பயனைச் செய்ய முடியும்? நிறையென்னும் கற்பினால் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளுவதே தலையான காப்பாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
மனதின் திண்மை ஒன்றே மகளிர் காப்பென்றாகும். சிந்தையில் தெளிவும், திண்மையும் இன்றேல் சிறைக் காவலாலும் பயனொன்றில்லை.
|
|
Translation
|
|
Of what avail is watch and ward? Honour's woman's safest guard.
|
|
Explanation
|
|
What avails the guard of a prison ? The chief guard of a woman is her chastity.
|
|
Transliteration
|
|
Siraikaakkum Kaappevan Seyyum Makalir
Niraikaakkum Kaappe Thalai
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|