|
இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் - மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகள் ஒருவன் இல்லாளிடத்து இல்லையாயின்; வாழ்க்கை எனைமாட்சித்து ஆயினும் இல் - அவ்வில்வாழ்க்கை செல்வத்தான் எத்துணை மாட்சிமையுடைத்தாயினும் அஃது உடைத்தன்று. ('இல்' என்றார் பயன்படாமையின்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
குடிக்குத்தக்க வொழுக்கம் மனையாள்மாட்டு இல்லையாகில், அவ்வில்வாழ்க்கை எத்துணை நன்மைகளை யுடைத்தாயினும் ஒரு நன்மையும் இன்றாம்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் - இல்லறத்திற்கேற்ற நற்குண நற்செய்கைகள் ஒருவனுடைய மனைவியிடத்தில் இல்லாவிடின்; வாழ்க்கை எனைமாட்சித்தாயினும் இல் - அவனது இல்வாழ்க்கை வேறு செல்வத்திலும் அதிகாரத்திலும் எத்துணைச் சிறந்ததாயினும் சிறப்புடையதாகாது.
'இல்' என்றது பயனின்மையை, "ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே". என்னும் பழமொழி இங்குக் கவனிக்கத் தக்கது.
|
|
கலைஞர் உரை:
|
|
நற்பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் அதற்குத் தனிச்சிறப்புக் கிடையாது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நல்ல குணமும் நல்ல செயல்களும் மனைவியிடம் இல்லாமற் போனால் அவ்வாழ்க்கை எத்தனை சிறப்புகளைப் பெற்றிருந்தாலும் பெறாததே.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(குடும்பத்தின் பெருமைக்கு, மனைவி தான் காப்பாளி) குடும்பத்துக்குப் பெருமையுண்டாக்கக் கூடிய நற்குணங்கள் மனைவியிடத்தில் இல்லாமற் போனால் வேறு என்ன சிறப்புக்கள் எவ்வளவு இருந்தாலும் பயனற்றவையாகும்.)
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
இல்லறத்திற்கேற்ற சிறப்பு மனைவியிடம் இல்லாமற் போனால் அவ்இல் வாழ்க்கை செல்வம் முதலிய வேறு வகைகளில் எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் பயனுடையதில்லையாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
இல்லாள்கண் ஒரு குடும்பத்திற்கேற்ற இயல்பான நற்பண்புகள் அமையப் பெறாவிடின், வேறு என்ன பேறுகள் இருப்பினும், பயன் இல்லை
|
|
Translation
|
|
If household excellence be wanting in the wife, Howe'er with splendour lived, all worthless is th
|
|
Explanation
|
|
If the wife be devoid of domestic excellence, whatever (other) greatness be possessed, the conjugal state, is nothing.
|
|
Transliteration
|
|
Manaimaatchi Illaalkan Illaayin Vaazhkkai
Enaimaatchith Thaayinum Il
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|