|
கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரே அல்லாமல் ஒன்றும் விளையாத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
தக்கார் இனத்தனாய்த் தான் ஒழுக வல்லானை - தக்காராகிய இனத்தை உடையவனாய்த் தானும் அறிந்து ஒழுக வல்ல அரசனை, செற்றார் செயக் கிடந்தது இல் - பகைவர் செய்யக் கிடந்ததொரு துன்பமும் இல்லை. (தக்கார்: அறிவு ஒழுக்கங்களால் தகுதியுடையார். ஒழுகுதல்: அறநீதிகளின் நெறி வழுவாமல் நடத்தல் வஞ்சித்தல், கூடினவரைப் பிரித்தல், வேறு பகை விளைத்தல் என்ற இவற்றானும், வலியானும் பகைவர் செய்யுந் துன்பங்கள் பலதிறத்த ஆயினும், தானும் அறிந்து, அறிவார் சொல்லும் கொண்டொழுகுவான்கண் அவற்றுள் ஒன்றும் வாராது என்பார், 'செற்றார் செயக்கிடந்தது இல்' என்றார்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தகுதியுடையா ரினத்தானாய்த் தானும் அவரோ டொக்க ஒழுகவல்லவனைப் பகைவர் செய்யக் கிடந்ததொருநெறி யில்லை.
இஃது இவனைப் பகைவரால் வெல்ல லொண்ணா தென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
தக்கார் இனத்தனாய்த் தான் ஒழுக வல்லானை - தக்க அமைச்சரைச் சுற்றமாகவுடையனாய்த் தானும் அறிந்தொழுக வல்ல அரசனை; செற்றார் செயக்கிடந்தது இல் - பகைத்தவர் செய்யக்கூடிய தீங்கு ஒன்று மில்லை.
தக்கார் அமைச்சுத் தொழிலுக்குத் தகுதியுடையார். நட்புப்பிரித்தல், பகைபெருக்குதல், உட்பகை விளைத்தல், பொருதல், வஞ்சித்தல், முதலிய பல்வேறு வலக்காரங்களை (தந்திரங்களை)ப் பகைவர் கையாளினும், தகுந்த அமைச்சர் துணைகொண்டு தானும் அறிந்தொழுக வல்லானுக்கு ஒரு தீங்குஞ் செய்ய முடியா தென்பார், 'செற்றார் செயக்கிடந்த தில் ' என்றார்.
|
|
கலைஞர் உரை:
|
|
அறிவும், ஆற்றலும் கொண்ட ஒருவன், தன்னைச் சூழவும்
அத்தகையோரையே கொண்டிருந்தால் பகைவர்களால் எந்தத் தீங்கையும்
விளைவிக்க முடியாது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
தகுதி மிக்க துறைப்பெரியவரை நட்பாகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பவரைப் பகைவர் ஏதும் செய்ய இயலாது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
பெரியவர்களுடைய சகவாசமுள்ளவனாக அவர்கள் ஆலோ சனையைக் கேட்டு நடந்துகொள்ளுகிற ஒருவனை அவனுடைய பகைவர்கள் ஒன்றும் செய்ய முடியாது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தகுதியான பெரியார்களின் துணையினை உடையவனாகித் தானும் அறிந்து நடந்துகொள்ள வல்லவர்க்குப் பகைவர் செய்யக் கூடியதொரு துன்பம் இல்லையாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
தகுதிவாய்ந்த பெரியோரைத் தன் துணையாகக் கொண்டுஅவர்தம் அறிவுரைகளுக்கேற்ப வாழுகின்ற திறமை சான்ற ஒருவரை பகைவர்கள் எளிதில் வெல்ல முடியாது.
|
|
Translation
|
|
The king, who knows to live with worthy men allied,
Has nought to fear from any foeman's pride.
|
|
Explanation
|
|
There will be nothing left for enemies to do, against him who has the power of acting (so as to secure) the fellowship of worthy men.
|
|
Transliteration
|
|
Thakkaa Rinaththanaaith Thaanozhuka Vallaanaich
Chetraar Seyakkitandha Thil
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|