|
நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
நல் ஆறு எனப்படுவது யாது எனின் - மேற்கதி வீடு பேறுகட்கு நல்ல நெறி என்று சொல்லப்படுவது யாது என்று வினவின், யாது ஒன்றும் கொல்லாமை சூழும் நெறி - அஃது யாதோர் உயிரையும் கொல்லாமை ஆகிய அறத்தினைக் காக்கக் கருதும் நெறி. ('யாது ஒன்றும்' என்றது, ஓரறிவுயிரையும் அகப்படுத்தற்கு. காத்தல்: வழுவாமல் காத்தல். இதனான் இவ்வறத்தினை உடையதே நல்நெறி என்பது கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
நல்ல வழியென்று சொல்லப்படுவது யாதெனின், அது யாதொருயிரையுங் கொல்லாமையைச் சிந்திக்கும் வழி.
இது நன்னெறியாவது கொல்லாமை யென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
நல் ஆறு எனப்படுவது யாது எனின்- பேரின்ப வீடுபேற்றிற்கு நல்ல வழியென்று சொல்லப்படுவது எது என வினவின் யாது ஒன்றும் கொல்லாமை சூழும் நெறி- அது எவ்வுயிரையும் கொல்லாமையைக் கருதும் நெறியாகும்.
"யாதொன்றும்" என்றது துறந்தாரை நோக்கி ஓரறிவுயிரையும் உட்படுத்தற்கு.
|
|
கலைஞர் உரை:
|
|
எந்த உயிரையும் கொல்லக் கூடாது எனும் நெறி காப்பதுதான் நல்லற
வழி எனப்படும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நல்ல வழி எது என்றால், எந்த உயிரையும் கொலை செய்யாமல் அறம் காக்கும் வழிதான்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(கொலை சம்பந்தப்பட்ட எந்தக் காரியமும் சன்மார்க்க மாகாது.) நன்னெறி என்பது எதுவென்றால், எதற்காகவானாலும் எந்த உயிரையும் கொல்லக்கூடாது என்ற கொள்கையுள்ளது தான்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
நல்ல நெறி என்று சொல்லப்படுவது யாது என்றால், அது யாதோர் உயிரையும் கொல்லாமையாகிய அறத்தினைக் காக்கும் நெறியேயாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
வாழ்வியல் நெறிகளுள்மிகவும் நன்மை பயப்பது யாதெனில் எந்த உயிரையும் எதற்காகவும் கொலை புரியாது ஒழுகுதலாகிய அறநிலைப்பாடே ஆகும்.
|
|
Translation
|
|
You ask, What is the good and perfect way?
'Tis path of him who studies nought to slay.
|
|
Explanation
|
|
Good path is that which considers how it may avoid killing any creature.
|
|
Transliteration
|
|
Nallaaru Enappatuvadhu Yaadhenin Yaadhondrum
Kollaamai Soozhum Neri
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|