|
முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் - துறந்தார்க்கு அருளான் உளவாய முகத்தின்கண் நகையையும் மனத்தின் கண் உவகையையும் கொன்று கொண்டெழுகின்ற சினமே அல்லாது, பிற பகையும் உளவோ - அதனின் பிறவாய பகைகளும் உளவோ? இல்லை. (துறவால் புறப்பகை இலராயினும் உட்பகையாய் நின்று அருள் முதலிய நட்பினையும் பிரித்துப் பிறவித் துன்பமும் எய்துவித்தலான், அவர்க்குச் சினத்தின் மிக்க பகை இல்லை
யாயிற்று. இவை மூன்று பாட்டானும் வெகுளியது தீங்கு கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
நகுதலையும் மகிழ்தலையுங் கெடுக்கின்ற சினத்தைப் போல, பகையா யிருப்பனவும் வேறு சிலவுளவோ?
இஃது இன்பக்கேடு வருமென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
(இ-ரை) நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் - இல்லறத்தார்க்கு அன்பாலும் துறவறத்தார்க்கு அருளாலும் முகத்தின்கண் தோன்றும் மலர்ச்சியையும் மனத்தின்கண் உண்டாகும் மகிழ்ச்சியையும் கெடுத்தெழுகின்ற சினமல்லாது; பிறபகையும் உளவோ - வேறுபகைகளும் உண்டோ? இல்லை.
சினத்தின் நீட்சியே பகையாதலானும் புறப்பகையில்லாத துறவியர்க்கும் சினம் அகப்பகையாய் அமைந்து பிறவித்துன்பத்தைப் பயத்தலானும், சினத்தின் வேறான பகை யில்லையாயிற்று.
|
|
கலைஞர் உரை:
|
|
சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும்
மறைந்து போய் விடும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
முகத்தில் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ?.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(எப்படி யென்றால், கோபம் வந்தவுடனேயே பகை யாளியைக் கண்டு விட்டது போலாகிறோம்) உதட்டிலிருந்த சிரிப்பையும் உள்ளத்திலிருந்த மகிழ்ச்சிகளையும் உடனே அழித்துவிடுகிற கோபத்தைவிடப் பகைவன் வேறு உண்டா?
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
முகத்தின்கண் தோன்றும் மலர்ச்சியான நகைப்பினையும் மனத்தில் தோன்றும் மகிழ்ச்சியினையும் கொன்றுவிடுகின்ற கோபத்தைவிட வேறு பகையும் உண்டோ?.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
முகத்தின் புன்னகையையும் அகத்தின் உவகைப் பெருக்கையும் அழிக்கும் தன்மையதான சினத்தை விட ஒருவருக்குப் பகையாவது வேறென்ன உண்டு?
|
|
Translation
|
|
Wrath robs the face of smiles, the heart of joy,
What other foe to man works such annoy?.
|
|
Explanation
|
|
Is there a greater enemy than anger, which kills both laughter and joy ?.
|
|
Transliteration
|
|
Nakaiyum Uvakaiyum Kollum Sinaththin
Pakaiyum Ulavo Pirac
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|