|
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
|
|
ஒருவன் தன் மனதோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவத்தேடு தானமும் ஒருங்கே செய்வாரை விடச் சிறந்தவன்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
மனத்தொடு வாய்மை மொழியின் - ஒருவன் தன்மனத்தொடு பொருந்த வாய்மையைச் சொல்வானாயின், தவத்தொடு தானம் செய்வாரின் தலை - அவன் தவமும் தானமும் ஒருங்கு செய்வாரினும் சிறப்புடையன். (மனத்தொடு பொருந்துதல் - மனத்திற்கு ஏறுதல். புறமாகிய மெய்யால் செய்யும் அவற்றினும் அகமாகிய மனம் மொழிகளால் செய்யும் அது பயனுடைத்து என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தன்னெஞ்சினாற் பொய்யை நினையாது ஒழுகுவனாயின் உலகத்தார் நெஞ்சினுளெல்லாம் உளனாவான்.
இது பொய்யை நினையாதாரை எல்லாரும் போற்றுவாரென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
மனத்தோடு வாய்மை மொழியின்- ஒருவன் தன் உள்ளத்தோடு பொருந்த உண்மையைச் சொல்வானாயின்; தவத்தோடு தானம் செய்வாரின் தலை- அவன் தவமுந் தானமும் ஒருங்கே செய்தவரினுஞ் சிறந்தவனாவன்.
தவத்தோடு தானஞ் செய்வதினினும் உளத்தோடு பொருந்த உண்மை சொல்வது அரிதாதலால், "தவத்தோடு தானஞ் செய்வாரிற் றலை" என்றார்.
|
|
கலைஞர் உரை:
|
|
உதட்டளவில் இன்றி உளமார வாய்மை பேசுகிறவர்கள் தவமும்,
தானமும் செய்கின்றவர்களைவிட உயர்ந்தவர்களாவார்கள்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
உள்ளம் அறிய உண்மை பேசுபவன், தவமும் தானமும் செய்பவரைக் காட்டிலும் உயர்ந்தவன் ஆவான்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(மனச் சாட்சிக்குப் பொய்யனாகாமல் வாயால் பொய்யே சொன்னாலுங்கூட அவன் மதிக்கத் தகுந்தவனாவானென்றால்) மனச் சாட்சிக்கும் மெய்யனாகி வாயாலும் மெய்யே பேசினால் அப்படிப் பட்டவன் தவமும் தாளமும் ஒருங்கே செய்கிறவர்களைவிடச் சிறந்தவள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஒருவன் தனது மனத்தோடு பொருந்திய வாய்மையினைச் சொல்லுவானானால், அவன் தானமும் தவமும் ஒருங்கே செய்பவரைவிட மேலானவனாவான்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
மனத்தோடு ஒன்றி வாய்மையே மொழிந்து வாழ்வார் தவம் செய்வாரினும், தானம் செய்வாரினும் சிறந்தவராகக் கருதப்படுவார்.
|
|
Translation
|
|
Greater is he who speaks the truth with full consenting mind.
Than men whose lives have penitence and charity combined.
|
|
Explanation
|
|
He, who speaks truth with all his heart, is superior to those who make gifts and practise austerities.
|
|
Transliteration
|
|
Manaththotu Vaaimai Mozhiyin Thavaththotu
Thaananjey Vaarin Thalai
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|