|
குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் - மயக்கம் ஆகிய குற்றத்தின் நீங்கிய அறிவினையுடையார், உயிரின் தலைப்பிரிந்த ஊன் உண்ணார் - ஓர் உயிரின் நீங்கி வந்த ஊனை உண்ணார். ( 'தலைப்பிரிவு' என்பது ஒரு சொல். பிணம் என ஊனின் மெய்ம்மை தாமே உணர்தலின், 'உண்ணார்' என்றார்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
குற்றத்தினின்று நீங்கின தெளிவுடையார் உண்ணார்; உயிரினின்று நீங்கின உடம்பை.
இது மேற்கூறிய குற்றமெல்லாம் பயத்தலின் அதனைத் தெளிவுடையாருண்ணாரென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் - மயக்கம் என்னும் குற்றத்தினின்று நீங்கிய தெள்ளறிவினர்; உயிரின் தலைப் பிரிந்த ஊன் உண்ணார் - ஓர் உயிரினின்று நீங்கிய வுடம்பை உண்ணார்.
உயிரினின்று நீங்கியது பிண மென்று உணர்தலின் உண்ணா ரென்றார். 'தலைப்பிரிதல்' என்பது ஒரு சொற்றன்மைப்பட்ட கூட்டுச்சொல். மயக்கம் ஐயமுந் திரிபும்.
|
|
கலைஞர் உரை:
|
|
மாசற்ற மதியுடையோர், ஓர் உயிரைப் பிரித்து அதன் ஊனை உண்ண
மாட்டார்கள்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பிழையற்ற அறிவினை உடையவர், உயிர் பிரிந்த இறைச்சியை உண்ணமாட்டார்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அதனால்) துன்பம் செய்வதை நீக்கிவிட்ட அறிவுடை யவர்கள் உயிரை நீக்கியதாகிய ஊனை உண்ணமாட்டார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
அஞ்ஞானமாகிய குற்றத்திலிருந்து நீங்கிய அறிவினையுடையவர்கள் ஊர் உயிரிலிருந்து நீங்கி வந்த ஊனினை உண்ணமாட்டார்கள்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நல்லது கெட்டதை நன்கறிந்த ஆன்றோர்கள், உயிர் பிரிந்த ஓர் உடம்பினை ஊன் என்று மகிழ்ந்து உண்ணமாட்டார்கள்.
|
|
Translation
|
|
Whose souls the vision pure and passionless perceive,
Eat not the bodies men of life bereave.
|
|
Explanation
|
|
The wise, who have freed themselves from mental delusion, will not eat the flesh which has been severed from an animal.
|
|
Transliteration
|
|
Seyirin Thalaippirindha Kaatchiyaar Unnaar
Uyirin Thalaippirindha Oon
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|