|
அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
அருள் நீங்கி அல்லவை செய்து ஒழுகுவார் - உயிர்கள் மாட்டுச் செய்யப்படும் அருளைத் தவிர்ந்து தவிரப்படும் கொடுமைகளைச் செய்து ஒழுகுவாரை, பொருள் நீங்கிப் பொச்சாந்தார் என்பர் - முன்னும் உறுதிப்பொருளைச் செய்யாது தாம் துன்புறுகின்றமையை மறந்தவர் என்று சொல்லுவர் நல்லோர். (உறுதிப்பொருள்: அறம், 'துன்புறுதல்' - பிறவித்துன்பம் மூன்றனையும் அனுபவித்தல். மறந்திலராயின், அவ்வாறு ஒழுகார் என்பது கருத்து.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
முற்பிறப்பின்கண் அருளினின்று நீங்கி அல்லாதவற்றைச் செய்தொழுகினவர் இப்பிறப்பின்கண் பொருளினின்று நீங்கி மறவியுமுடையவரென்று சொல்லுவர்.
இது பொருளில்லையாமென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
அருள் நீங்கி அல்லவை செய்து ஒழுகுவார்-உயிர்களிடத்து அருள் செய்யாது அதற்கு மாறான கொடுமைகளைச் செய்து ஒழுகுவார்; பொருள் நீங்கிப் பொச்சாந்தார் என்பர்-முற்பிறப்பில் அறமாகிய உறுதிப்பொருளைத் தேடாது இப்பிறப்பிலும் அதை மறந்தவர் என்பர் அறிவுடையோர்.
|
|
கலைஞர் உரை:
|
|
அருளற்றவர்களாய்த் தீமைகளைச் செய்து வாழ்பவர்கள்,
பொருளற்றவர்களாகவும், கடமை மறந்தவர்களாகவும் ஆவர்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
அருள் இல்லாமல் தீமைகளைச் செய்து வாழ்பவரைப் பொருளையும் இழந்து தாம் துன்பம் அடைந்ததையும் மறந்தவர் என்று அறிஞர் கூறுவர்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
சீவகாருணிய ஒழுக்கத்தைவிட்டு அதற்கு மாறான காரியங்களைச் செய்கிறவர்கள் கையிலிருந்த பண முடிப்பை வைத்த இடம் மறந்துபோய்த் திண்டாடுகிறவர்களுக்கு ஒப்பாவார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
உயிர்களிடம் காட்டப்படும் அருளிலிருந்து நீங்கிக் கொடுமைகளைச் செய்து நடப்பவர்கள் உறுதிப் பொருளைச் செய்யாமல் தாம் துன்புறுகின்றமையை மறந்தவர்கள் என்று செல்லப்படுவார்கள்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
அருள் இல்லாத தன்மையராய்ப் பிறர்க்குத் தீங்கு செய்து வாழும் மாந்தர் வையத்தில் பொருளற்றவராய் மாய்ந்து கெடுவர்.
|
|
Translation
|
|
AGain of true wealth oblivious they eschew,
Who 'grace' forsake, and graceless actions do
|
|
Explanation
|
|
(The wise) say that those who neglect kindness and practise cruelties, neglected virtue (in their former birth), and forgot (the sorrows which they must suffer).
|
|
Transliteration
|
|
Porulneengip Pochchaandhaar Enpar Arulneengi
Allavai Seydhozhuku Vaar
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|