|
சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
சாதலின் இன்னாதது இல்லை - ஒருவற்குச் சாதல் போல இன்னாதது ஒன்று இல்லை, அதூஉம் ஈதல் இயையாக் கடை இனிது - அத்தன்மைத்தாகிய சாதலும், வறியார்க்கு ஒன்று ஈதல் முடியாதவழி இனிது. (பிறர்க்குப் பயன்படாத உடற்பொறை நீங்குதலான் 'இனிது' என்றார். இவை மூன்று பாட்டானும் ஈயாமையின் குற்றம் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
சாதலின் மிக்க துன்பமில்லை. அதுவும் இனிதாம் இரந்து வந்தவர்க்குக் கொடுத்தல் முடியாவிடத்து.
இஃது ஈயாது வாழ்தலில் சாதல் நன்றென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
சாதலின் இன்னாதது இல்லை-ஒருவனுக்கு இறத்தலைப்போலத் துன்பந் தருவது வேறொன்றுமில்லை; அதுவும் ஈதல் இயையாக்கடை இனிது-அவ்விறப்பும் வறியார்க்கொன்றீதல் இயலாவிடத்து இன்பந்தருவதாம்.
ஈகையாளனுக்கு இறப்புத் துன்பத்திலும் ஈயாத்துன்பம் பெரியதும் பொறுத்தற்கரியது மாதலின், சாதல் அவனுக்கு இனிதென்றார். இது வெளிப்படை. இனி, ஈயாத கஞ்சர் உலகத்திலிருத்தல் தகாது என்பது குறிப்பு. "ஈயாத புல்லரிருந்தென்ன போயென்ன எட்டிமரம்; காயாதிருந்தென்ன காய்த்துப் பலனென்ன" என்று படிக்காசுப் புலவரும் பாடியமை காண்க. 'இனிததூஉம்' இன்னிசை யளபெடை.
|
|
கலைஞர் உரை:
|
|
சாவு எனும் துன்பத்தைவிட வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாத
மனத்துன்பம் பெரியது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(யாருக்கும் எதையும் கொடுக்க மனமில்லாமல் வாழ்ந்த ஒருவன் இறந்துவிட்டாலும்) சாவைக்காட்டிலும் துக்கமுண்டாக்கக் கூடிய சேதி வேறொன்றுமில்லை. ஆனால் ஈகைக் குணம் இல்லாத வனைப் பற்றிய அந்தச் சேதிகூட கேட்பவர்களுக்கு இன்ப முண்டாக்கும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
சாதல் போலத் துன்பம் தருவது வேறு எதுவும் இல்லை. அப்படிப்பட்ட சாதலும், வறியவர்களுக்குக் கொடுக்க முடியாதபோது இன்பம் தருவதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
சாதல் துன்பகரமானதே, ஆயினும் வறியவர்க்கு ஒரு பொருள் வழங்க இயலாத நிலையில் இறத்தலும் இன்பமாகுமோ?
|
|
Translation
|
|
'Tis bitter pain to die, 'Tis worse to live.
For him who nothing finds to give!.
|
|
Explanation
|
|
Nothing is more unpleasant than death: yet even that is pleasant where charity cannot be exercised.
|
|
Transliteration
|
|
Saadhalin Innaadha Thillai Inidhadhooum
Eedhal Iyaiyaak Katai
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|