|
பிறரிடம் பொருள் பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது, மேலுலகம் இல்லை என்றாலும் பிறக்குக் கொடுப்பதே சிறந்தது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
கொளல் நல் ஆறு எனினும் தீது - ஏற்றல் வீட்டுலகிற்கு நல்ல நெறி என்பார் உளராயினும் அது தீது, மேல் உலகம் இல் எனினும் ஈதலே நன்று - ஈந்தார்க்கு அவ்வுலகு எய்துதல் இல்லை என்பார் உளராயினும் , ஈதலே நன்று. ('எனினும்' என்பது இரு வழியும் அங்ஙனம் கூறுவார் இன்மை விளக்கி நின்றது. பிரிநிலை ஏகாரத்தால் பிற அறங்களின் ஈதல் சிறந்தது என்பது பெற்றாம். நல்லது கூறுவார் தீயதும் உடன் கூறினார்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
ஒருவன்மாட்டுக் கொள்ளல் நன்மை பயக்கும் நெறியெனினும் கோடல் தீது: ஒருவர்க்குக் கொடுத்தாற் பாவ முண்டெனினும் கொடுத்தல் நன்று.
கொள்வோ ரமைதி யறிந்து கொடுக்கவேண்டுமெனினும் இது வரையாது கொடுத்தலாதலால் யாதொருவாற்றானுங் கொடை நன்றென்பது கூறிற்று.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
கொளல் நல் ஆறு எனினும் தீது - பிறரிடத்தினின்று வாங்குவது வீட்டுலகத்திற்கு நல்வழியென்று அறநூல் கூறினும் வாங்குவது தீயது; மேல் உலகம் இல் எனினும் ஈதலே நன்று - பிறருக்குக் கொடுப்பதால் அவ்வுலகத்தை அடைய முடியாதென்று அந்நூல் கூறினும், கொடுத்தலே நல்லது.
உம்மை ஈரிடத்தும் எதிர்மறை, கொடுத்தல் தருதல் என்னும் சொற்களினும் ஈதல் என்னும் சொல்லே இவ்வதிகாரத்திற்கு ஏற்றதாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
பிறரிடமிருந்து நல்வழியில் பொருளைப் பெற்றாலும் அது
பெருமையல்ல; சிறுமையே ஆகும். கொடை வழங்குவதால் மேலுலகம்
என்று சொல்லப்படுவது கிட்டிவிடப் போவதில்லை; எனினும் பிறர்க்குக்
கொடுத்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நல்லதுதான் என்று எவரேனும் சொன்னாலும் பிறரிடம் ஒன்றைப் பெறுவது தீமை; ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதால் விண்ணுலகம் கிடைக்காது என்றாலும் கொடுப்பதே நல்லது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஏழைகளுக்குக் கொடுப்பதில் புண்ணியத்தைக்கூட எதிர் பார்க்கக் கூடாது அப்படியிருக்க) நல்ல காரியத்துக்கானாலுங் கூட ஏழைகளிடத்திலிருந்து வாங்கக் கூடாது. மோட்சலோகம் கிடைக்காமற் போய்விடுவதானாலும் ஏழைகளுக்குக் கொடுப்பதே நல்லது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
இராப்பது (யாசிப்பது) நன்னெறியாகும் என்று சொல்லுபவர்கள் இருந்தாலும் அது தீதான செயலாகும். ஈகையினைச் செய்வதால் மேலுலகம் அடைய முடியாதென்று சொன்னாலும் ஈதலே நன்று.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நற்பணிகளுக்கே என்றாலும் கூட பிறரிடம் பொருளைப் பெறுவது நன்றன்று. மேலுலக வாழ்க்கை அமையாதென்ற போதும் பிறருக்கு வழங்கி மகிழ்தலே நல்லது.
|
|
Translation
|
|
Though men declare it heavenward path, yet to receive is ill;
Though upper heaven were not, to give is virtue still.
|
|
Explanation
|
|
To beg is evil, even though it were said that it is a good path (to heaven). To give is good, even though it were said that those who do so cannot obtain heaven.
|
|
Transliteration
|
|
Nallaaru Eninum Kolaldheedhu Melulakam
Illeninum Eedhale Nandru
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|