|
ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
தக்கார்க்கு - தகுதி உடையார்க்கு ஆயின், தாள் ஆற்றித் தந்த பொருள் எல்லாம் - முயல்தலைச் செய்து ஈட்டிய பொருள் முழுவதும், வேளாண்மை செய்தற் பொருட்டு - ஒப்புரவு செய்தற் பயத்தவாம். (பிறர்க்கு உதவாதார் போலத் தாமே உண்டற்பொருட்டும் வைத்து இழத்தற்பொருட்டும் அன்று என்பதாயிற்று.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
ஒருவன் முயன்று ஈட்டிய பொருளெல்லாம் தகுதி யுடையார்க்கு உபகரித்தற்காகவாம்.
இது பொருளுண்டானால் ஒப்புரவு செய்கவென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
தாள் ஆற்றித் தந்த பொருள் எல்லாம் - ஒப்புரவாளன் முயற்சி செய்து தொகுத்த செல்வம் முழுதும்; தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு - தகுதியுடையார்க்குப் பல்வகையிலும் உதவி செய்தற் பொருட்டேயாம்.
இதனால், இடைவிடாது முயற்சி செய்து மேன்மேலும் பொருளீட்டாது இருந்துண்ணும் சோம்பேறித்தனமும், தகுதியில்லாதவர்க்குச் செய்யும் தவறான வேளாண்மையும் விலக்கப்பட்டன. குந்தித் தின்றாற் குன்றுங் குன்றும். ஆதலின், ஒப்புரவாளனுக்கு இடைவிடா முயற்சி வேண்டுமென்பதாம். பொருளுள்ளவரும் தமிழைக்கெடுப்பவரும் தகுதியற்றவராவர். ஒப்புரவாளன் என்னும் எழுவாய் அதிகாரத்தால் வந்தது.
|
|
கலைஞர் உரை:
|
|
தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று
திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
முயன்று சம்பாதித்த பொருள் எல்லாம், உழைக்க முடியாமல் பொருள் தேவைப்படுவோர்க்கு உதவுவதற்கே.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஒப்புரவறியும் குணம் மிகுந்தவர்கள் எப்படி எண்ணு வார்களென்றால்) பாடுபட்டுச் சம்பாதிக்கிற செல்வமெல்லாம் உதவி பெறத் தகுந்தவர்களுக்கு உதவி செய்வதற்காகத்தான்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தகுதியுடைய பெரியவர்களுக்கு, முயற்சி செய்து ஈட்டிய பொருளெல்லாம் ஒப்புரவு (உதவி) செய்வதற்கேயாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
முயன்று, உழைத்து ஒருவர் ஈட்டிய செல்வம் யாவும் தகுதி வாய்ந்தவர்களுக்கு உதவி செய்வதற்காகவே அமைதல் வேண்டும்.
|
|
Translation
|
|
The worthy say, when wealth rewards their toil-spent hours,
For uses of beneficence alone 'tis ours.
|
|
Explanation
|
|
All the wealth acquired with perseverance by the worthy is for the exercise of benevolence.
|
|
Transliteration
|
|
Thaalaatrith Thandha Porulellaam Thakkaarkku
Velaanmai Seydhar Poruttu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|