|
ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
மருங்கு ஓடித் தீவினை செய்யான் எனின் - ஒருவன் செந்நெறிக் கண் செல்லாது கொடுநெறிக்கண் சென்று பிறர்மாட்டுத் தீவினைகளைச் செய்யானாயின், அருங்கேடன் என்பது அறிக - அவன் அரிதாகிய கேட்டையுடையவன் என்பது அறிக. (அருமை: இன்மை.. அருங்கேடன் என்பதனை, 'சென்று சேக்கல்லாப் புள்ள உள்ளில் என்றூழ் வியன்குளம்' (அகநா.42) என்பது போலக் கொள்க. 'ஓடி' என்னும் வினையெச்சம் 'செய்யான்' என்னும் எதிர்மறை வினையின் செய்தலோடு முடிந்தது. இதனால் தீவினை செய்யாதவன் கேடிலன் என்பது கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
ஒருமருங்கு ஓடிப் பிறர்க்குத்தீவினைகளைச் செய்யானாயின் தனக்குக் கேடுவருவ
தில்லை யென்று தானே யறிக.
இது கேடில்லை யென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
மருங்கு ஓடித்தீவினை செய்யான் எனின் - ஒருவன் செந்நெறியினின்றும் ஒரு பக்கமாக விலகிச் சென்று பிறர்க்குத் தீமை செய்யானாயின்; அருங்கேடன் என்பது அறிக - அவன் கேடில்லாதவன் என்பதை அறிந்து கொள்க.
அருமை இங்கு இன்மை குறித்தது. அருங் கேடன் என்பது காலில்லாதவனை இல்லாக் காலன் என்றாற் போல்வது. இது செய்யுள் வழக்கு. மருங்கோடுதல் விரைந்து விலகுதல்.
|
|
கலைஞர் உரை:
|
|
வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்கா தவர்க்கு
எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
தீய வழிகளில் பிறர்க்குத் தீமை செய்யாது வாழ்பவனே கேடு இல்லாதவன் என்று அறிக.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அதனால்) ஆத்திரப்பட்டுப் பிறருக்குத் தீமை செய்யாமல் இருப்பவனே தனக்கு ஒரு துன்பமும் வராமல் இருக்க கூடியவன் என்பதை அறிய வேண்டும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஒருவன் கொடுமையான வழியிலே சென்று தீச் செயல்களைப் பிறருக்குச் செய்யாதிருப்பானானால் அவன் கெடுதி இல்லாதவன் என்பதனை அறிந்துகொள்ளுதல் வேண்டும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
தவறான வழிகளில் சென்று ஒருவன் தீய செயல்களைக் செய்யாதிருந்தான் எனில், அவன் வாழ்வில் கேடு நேராது என அறிந்து கொள்க.
|
|
Translation
|
|
The man, to devious way of sin that never turned aside,
From ruin rests secure, whatever ills betide.
|
|
Explanation
|
|
Know ye that he is freed from destruction who commits no evil, going to neither side of the right path.
|
|
Transliteration
|
|
Arungetan Enpadhu Arika Marungotith
Theevinai Seyyaan Enin
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|