|
துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீயசெயல்களைத் தான் பிறருக்குச் செய்யாமலிருக்க வேண்டும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
நோய்ப்பால தன்னை அடல் வேண்டாதான் - துன்பம் செய்யும் கூற்றவாகிய பாவங்கள் தன்னைப் பின் வந்து வருத்துதலை வேண்டாதவன், தீப்பால தான் பிறர்கண் செய்யற்க - தீமைக்கூற்றவாகிய வினைகளைத் தான் பிறர்மாட்டுச் செய்யாது ஒழிக. (செய்யின் அப்பாவங்கள் அடுதல் ஒருதலை என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தன்னைத் துன்பப்பகுதியானவை நலிதல் வேண்டாதவன் தீமையாயினவற்றைத் தான் பிறர்க்குச் செய்யதா தொழிக.
இது நோயுண்டாமென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
நோய்ப்பால தன்னை அடல் வேண்டாதான்-துன்புறுத்துந் திறத்தனவாகிய குற்றங்கள் தன்னைப் பின் வந்து வருத்துதலை விரும்பாதவன்; தீப்பால தான் பிறர்கண் செய்யற்க-தீமை செய்யுந் திறத்தனவாகிய வினைகளைத் தான் பிறரிடத்துச் செய்யாதிருக்க.
தன்னலம் பற்றியேனும் பிறர்க்குத் தீமை செய்யாதிருக்க என்றவாறு.
|
|
கலைஞர் உரை:
|
|
வேதனை விளைவிக்கும் தீய செயல்கள் தன்னைத் தாக்கலாகாது என
எண்ணுகிறவன் அவனும் அத் தீங்குகளைப் பிறருக்குச் செய்யாமல் இருக்க
வேண்டும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
துன்பம் தருவன தன்னைச் சூழ்ந்து வருத்த விரும்பாதவன், பிறர்க்குத் தீமை செய்யக்கூடாது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(பிறருக்குத் தீமை செய்தாலும் செல்வம் வருவது நிச்சயமல்ல; ஆனால் துன்பம் வருவது நிச்சயம். அதனால்) துன்பம் உண்டாக்கக் கூடிய தீவினைப் பயன்கள் பின்னால் தன்னை வருத்தப்படாமல் இருக்க விரும்புகின்றவன், பிறருக்குத் தீமை செய்யாமலிருக்க வேண்டும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தமக்குப் பின்பு துன்பங்களை வந்து வருத்த வேண்டாமென்று நினைப்பவர்கள், பிறர்க்குத் துன்பம் தரும் செயல்களைச் செய்யாதிருப்பார்களாக.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
தனக்கு யாதொரு துன்பமும் நேரலாகாது என எண்ணுகிறவன் எந்த நிலையிலும் பிறருக்கு நீங்கு செய்தல் கூடாது.
|
|
Translation
|
|
What ranks as evil spare to do, if thou would'st shun
Affliction sore through ill to thee by others done.
|
|
Explanation
|
|
Let him not do evil to others who desires not that sorrows should pursue him.
|
|
Transliteration
|
|
Theeppaala Thaanpirarkan Seyyarka Noippaala
Thannai Atalventaa Thaan
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|