|
பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தைக் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்தி விடும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
அழுக்காறு என ஒரு பாவி - அழுக்காறு என்று சொல்லப்பட்ட ஒப்பில்லாத பாவி; திருச்செற்றுத் தீயுழி உய்த்துவிடும் - தன்னை உடையானை இம்மைக்கண் செல்வத்தைக் கெடுத்து,மறுமைக்கண் நரகத்தில் செலுத்திவிடும். (பண்பிற்குப் பண்பி இல்லையேனும், தன்னை ஆக்கினானை இருமையுங்கெடுத்தற் கொடுமை பற்றி, அழுக்காற்றினைப் 'பாவி' என்றார், கொடியானைப் 'பாவி' என்னும் வழக்கு உண்மையின். இவை ஆறு பாட்டானும் அழுக்காறு உடைமையது குற்றம் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
அழுக்காற்றைச் செய்து பெரியராயினாரும் இல்லை: அச்செயலிலாதார் பெருக்கத்தி னீங்கினாரு மில்லை.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
அழுக்காறு என ஒரு பாவி-பொறாமை யென்று சொல்லப்படும் ஒப்பற்ற கரிசன் (பாவி) திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும்-தன்னை யுடையவனை இம்மைக்கண் செல்வங்கெடுத்து மறுமைக்கண் நரகத்திற் புகுத்தி விடுவான்.
பொறாமைக் குணத்தை ஒரு கொடியனாகக் குறித்தது ஆட்படையணி (Personification). தீயுழி என்பது எரிவாய் நரகத்தின் பெயர். விடும் என்பது செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று. கரிசி (பாவம்)-கரிசன் (ஆண்பால்), கரிசு (பெண் பால்).
|
|
கலைஞர் உரை:
|
|
பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத்
தீயவழியிலும் அவனை விட்டுவிடும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பொறாமை எனப்படும் ஒப்பில்லாத பாவி எவனிடம் இருக்கிறதோ, அவனது செல்வத்தை அழிப்பதோடு, அவனை நரகத்திலும் அது சேர்க்கும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அதனால்) பொறாமை என்ற பாவம் செல்வத்தையும் அழித்து, பல தீமைகளிலும் தள்ளிவிடும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பொறாமை என்று சொல்லப்படுகின்ற ஒரு பாவி தன்னுடையானுடைய செல்வத்தைக் கெடுத்துத் தீய நிலைக்குள் தள்ளிவிடுவான்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
பொறாமை என்கின்ற ஒரு 'பாவி' ஒருவனுடைய செல்வச் செழிப்புகளையெல்லாம் சிதைத்து விட்டு அவனைத் தீவினைக்கண் செலுத்திவிடும்.
|
|
Translation
|
|
Envy, embodied ill, incomparable bane,
Good fortune slays, and soul consigns to fiery pain.
|
|
Explanation
|
|
Envy will destroy (a man's) wealth (in his world) and drive him into the pit of fire (in the world to come).
|
|
Transliteration
|
|
Azhukkaaru Enaoru Paavi Thiruchchetruth
Theeyuzhi Uyththu Vitum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|