|
யாரிடத்திலும் பொறாமை இல்லாதிருக்கப் பெற்றால், ஒருவன் பெறத்தக்க மேம்பாடான பேறுகளில் அதற்கு ஒப்பானது வேறொன்றும் இல்லை.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
யார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின் - யாவர் மாட்டும் அழுக்காற்றினின்று நீங்குதலை ஒருவன் பெறுமாயின்; விழுப்பேற்றின் அஃது ஒப்பது இல்லை - மற்று அவன் பெறும் சீரிய பேறுகளுள் அப்பேற்றினை ஒப்பது இல்லை. (அழுக்காறு பகைவர் மாட்டும் ஒழிதற்பாற்று என்பார், 'யார் மாட்டும்' என்றார். அன்மை-வேறாதல். இவை இரண்டு பாட்டானும் அழுக்காறு இன்மையது குணம் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
விழுமிய பேறுகளுள் யார் மட்டும் அழுக்காறு செய்யாமையைப் பெறுவனாயின், அப்பெற்றியினை யொப்பது பிறிதில்லை.
இஃது அழுக்காறு செய்யாமை யெல்லா நன்மையினும் மிக்கதென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
யார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின் - யாரிடத்தும் பொறாமையில்லா தொழுகுதலை ஒருவன் பெறுமாயின்; விழுப் பேற்றின் அஃது ஒப்பது இல்லை - அவன் பெறுஞ் சிறந்த பேறுகளுள் அதை யொப்பது வேறு ஒன்றும் இல்லை.
'யார் மாட்டும் ' என்றதால் , பகைவரிடத்தும் பொறாமை கொள்ளுதல் விலக்கப்பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பு ஒருவர்க்கு வாய்க்கப்
பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு எதுவுமில்லை.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
எவர் இடத்தும் பொறாமை கொள்ளாதிருப்பதை ஒருவன் பெற்றால் சீரிய சிறப்புகளுள் அது போன்றது வேறு இல்லை.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
யாருடைய நல்வாழ்வைக் கண்டும் பொறாமை கொள்ளாத மனப்பான்மை அடைந்துவிட்டால், விரும்பத்தக்க மேலான செல்வங்களுள் அதற்கு இணையாவது வேறில்லை.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஒருவன் யாவரிடத்திலும் பொறாமை இல்லாமல் இருப்பதே சிறந்த செல்வமாகும். அவன் பெறுகின்ற சீரிய செல்வங்களுள், அச்செல்வத்திற்குச் சமமானது வேறு எதுவும் இல்லை.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
யார்மாட்டும் பொறாமை கொள்ளாத பண்பை ஒருவன் வாழ்வியல் நெறியாகக் கொள்வானாயின் அதனினும் சிறந்ததாகக் கூறுவதற்கு யாதொன்றும் இல்லை.
|
|
Translation
|
|
If man can learn to envy none on earth,
'Tis richest gift, -beyond compare its worth.
|
|
Explanation
|
|
Amongst all attainable excellences there is none equal to that of being free from envy towords others.
|
|
Transliteration
|
|
Vizhuppetrin Aqdhoppadhu Illaiyaar Maattum
Azhukkaatrin Anmai Perin
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|