|
ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் - செய்தற்கு அருமை நோக்கி ஒழுக்கத்தின் சுருங்கார் மனவலி உடையார்; இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து - அவ்விழுக்கத்தால் தமக்கு இழிகுலம் ஆகிய குற்றம் உண்டாம் ஆற்றை அறிந்து. (ஒழுக்கத்தின் சுருக்கம் அதனை உடையார் மேல் ஏற்றப்பட்டது. கொண்ட விரதம் விடாமை பற்றி 'உரவோர்' என்றார்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
ஒழுக்கத்தினின்று நீங்கார் அறிவுடையார்: அதனைத் தப்பினாற் குற்றம் வருதலை
யறிந்து.
இஃது இதனை அறிவுடையார் தவிராரென்றது. குற்றம் வருதல் பின்னே காணப்படும்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து - ஒழுக்கக் கேட்டால் தமக்கும் குலவிழிபாகிய கேடுண்டாவதை யறிந்து , உரவோர் ஒழுக்கத்தின் ஒல்கார் - அறிவுரையோர் ஒழுக்கத்தில் தளரார் .
'பாக்கு' ஒரு தொழிற்பெயரீறு.
|
|
கலைஞர் உரை:
|
|
மன உறுதி கொண்டவர்கள் ஒழுக்கம் தவறுவதால் ஏற்படும் இழிவை
உணர்ந்திருப்பதால், நல்லொழுக்கம் குன்றிடுமளவிற்கு நடக்க மாட்டார்கள்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
ஒழுக்கம் இழந்தால் தனக்குக் குலத்தாழ்வு உண்டாகும் என அறியும் மன உறுதி உடைய பெரியோர், கடினமே என்றாலும் ஒழுக்கத்திலிருந்து விலகமாட்டார்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஒழுக்கம் என்பது ஒருவன் செய்கிற ஒவ்வொரு செய்கையும் பற்றியதானதால் சிரமமாக இருக்கும். இருந்தாலும்) ஒழுக்கம் கெடுவதால் வரக்கூடிய குற்றங்களை அறிந்த அறி வுடையவர்கள் ஒழுக்கத்தில் தளரமாட்டார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஒழுக்கம் கேட்டுவிடுவதால் இழிகுலமாகும் என்பதாக வருகின்ற குற்றத்தினைத் தெரிந்த மனா வலிமை கொண்ட பெரியோர்கள் ஒழுக்கத்திலிருந்து குறைந்துவிட மாட்டார்கள்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஒழுக்கம் பிறழ்வதால் நிகழும் தீவினைகளை அறிந்த சான்றோர் எந்த சூழலிலும் ஒழுக்க நெறியிலிருந்து விலகுவதில்லை.
|
|
Translation
|
|
The strong of soul no jot abate of 'strict decorum's' laws,
Knowing that 'due decorum's' breach foulest disgrace will cause.
|
|
Explanation
|
|
Those firm in mind will not slacken in their observance of the proprieties of life, knowing, as they do, the misery that flows from the transgression from them.
|
|
Transliteration
|
|
Ozhukkaththin Olkaar Uravor Izhukkaththin
Edham Patupaak Karindhu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|