|
என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் பொருந்தவில்லை.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(இதுவும் அது.) பேணாது பெட்பவே செய்யினும் - நம்மை அவமதித்துத் தான் செய்ய வேண்டியனவே செய்யுமாயினும்; கொண்களைக் கண் காணாது அமையல - கொண்கனை என் கண்கள் காணாது அமைகின்றன இல்லை. (தன் விதுப்புக் கண்கள்மேல் ஏற்றப்பட்டது. 'அத்தன்மையேன் அவனோடு புலக்குமாறு என்னை' ? என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தம்மை விரும்பாது தன்மனம் விரும்புவனவே செய்தானாயினும் கொண்கனைக் காணாது என்கண்கள் அமையமாட்டா.
இவையெல்லாம் ஊடற்பகுதியானமையும் முன்னுறுபுணர்ச்சி யின்மையும் ஆமாறு கண்டுகொள்க.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
பேணாது பெட்பவே செய்யினும் - நம்மைப் புறக்கணித்துத் தாம் விரும்பியவற்றையே செய்வாராயினும் ; கொண்கனைக் காணாது கண் அமையல-காதலரைக் காணாது என் கண்கள் அமைகின்றன வல்ல
அத்தகைய கண்களை வைத்துக்கொண்டு நான் புலப்பதெங்ஙனம் என்பதாம் . தன்விதுப்புக்கண்மே லேற்றப்பட்டது . ஏகாரம் பிரிநிலை . எதிர்மறையும்மை ஒத்துக்கொள்வுப் பொருளது.
|
|
கலைஞர் உரை:
|
|
என்னை அரவணைக்காமல் தமக்கு விருப்பமானவற்றையே செய்து
கொண்டிருந்தாலும், என் கண்கள் அவரைக் காணாமல் அமைதி
அடைவதில்லை.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
என்னை அவமதித்து அவர் தம் விருப்பப்படியே செய்தாலும் என் கண்கள் அவரைக் காணாமல் இருப்பதில்லை.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
என் விருப்பத்தை மதிக்காமல் தாம் விரும்பியபடியே தாமதித்து வந்தவரானாலும் அவரைப் பார்த்துக் கொண்டே யிருக்க ஆசைப்பட்டு என் கண்கள் அமைதியாக இருக்க மறுக்கின்றன.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
நம்மை விரும்பாது அவமதித்துத் தாம் விரும்பியவற்றையே செய்தாலும் தலைவனை எனது கண்கள் பார்க்காமல் இருக்கமாட்டா.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
என்னைப் பேணி அன்பு செய்யாராய் தன் விருப்பப்படியே நடந்து கொள்வாராயினும் காதலரைக் காணாமல் என் கண்கள் அமைதி பெறுவதில்லை.
|
|
Translation
|
|
Although his will his only law, he lightly value me,
My heart knows no repose unless my lord I see.
|
|
Explanation
|
|
Though my eyes disregard me and do what is pleasing to my husband, still will they not be satisfied unless they see him.
|
|
Transliteration
|
|
Penaadhu Petpave Seyyinum Konkanaik
Kaanaa Thamaiyala Kan
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|