|
அரும்பு தோன்றும்போது அடங்கியிருக்கும் மணத்தைப் போல், காதலியின் புன்முறுவலின் தோற்றத்தில் அடங்கி இருக்கும் குறிப்பு ஒன்று உள்ளது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(இதுவும் அது.) முகை மொக்குள் உள்ளது நாற்றம்போல் - முகையது முகிழ்ப்பினுளதாய்ப்புறத்துப் புலனாகாத நாற்றம் போல; பேதை நகை மொக்குள் உள்ளது ஒன்று உண்டு - நின் பேதை என்னோடு நகக் கருதும் நகையது முகிழ்ப்பினுளதாய்ப் புறத்துப் புலனாகாததோர் குறிப்பு உண்டு. (முகிழ்ப்பு - முதிர்ச்சியாற் புடைபடுதல். நகை - புணர்ச்சி இன்பத்தான் நிகழ்வது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
மொட்டின் முகிழ்ப்பின்கண் உளதாகிய நாற்றம்போலப் பேதையுடைய நகைமுகிழ்ப்பின்கண்ணே உள்ளதோ ரின்பம் உண்டு. இஃது இரந்து பின்னின்ற தலைமகனைத் தோழி நகைசெய்து சேட்படுத்திய போது இவள் குறிப்பு நமக்கு இன்பம் பயக்குமென்று அவன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
(இதுவுமது) முகை மொக்குள் உள்ளது நாற்றம் போல்-மொட்டின் முகப்பிற்குள் அடங்கிக் கிடந்து வெளியிற் பரவாத மணம் போல ; பேதை நகை மொக்குள் உள்ளது ஒன்று உண்டு-என் இளங்காதலியின் நகை யரும்பும் முறுவலுக்குள் உள்ளதாய் வெளியில் தோன்றாத தொரு குறிப்புண்டு. நகை புணர்ச்சி யின்பத்தால் தோன்றும் மகிழ்ச்சி வெளிப்பாடு.
|
|
கலைஞர் உரை:
|
|
மலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பது போலத்தான் ஒரு பெண்ணின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது காதலனைப்பற்றிய நினைவும் நிரம்பியிருக்கிறது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
மலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பது போலத்தான் ஒரு பெண்ணின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது காதலனைப்பற்றிய நினைவும் நிரம்பியிருக்கிறது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(என்னை மகிழ்ச்சியுடன் வரவேற்காமல் கோபித்தவள் போல் நிற்கிறாளானாலும்) இதழ் விரியாவிடினும் மலரப் போகிற பூ மொட்டின் உள்ளேயிருக்கிற மணம் வெளியிலும் வீசுவதுபோலப் பல் தெரியாதபடி குவிந்திருக்கிற இவளுடைய உதடுகளுக்குள்ளே சிரிப்பு இருக்கிறது எனக்குத் தெரிகிறது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
மலராத மொட்டுக்குள்ளிருந்து வெளியே புலப்படாத மணத்தினைப் போல இப்பெண் என்னுடன் நகைக்கக்கருதும் முகிழப்பினுள் ஒரு குறிப்பு உண்டு.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
மலர் மொட்டுக்குள் மறைந்திருக்கும் மணம் போல எம் காதலியின் மெல்லிய புன் முறுவலுக்குள் ஒரு மோகனம் மறைந்துள்ளது.
|
|
Translation
|
|
As fragrance in the opening bud, some secret lies
Concealed in budding smile of this dear damsel's eyes.
|
|
Explanation
|
|
There is something in the unmatured smile of this maid like the fragrance that is contained in an unblossomed bud.
|
|
Transliteration
|
|
Mukaimokkul Ulladhu Naatrampol Pedhai
Nakaimokkul Ulladhon Runtu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|