|
பசலை நிறம் அடைந்து நீர் சொரியும் கண்கள், நாம் விரும்பிய காதலர் நமக்கு அன்பு செய்யாத தன்மையைப் ( பிறர்க்குச்) சொல்வன போல் உள்ளன.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(இதுவும் அது.) பசந்து பனி வாரும் கண் - பசப்பெய்தன்மேல் நீர் வார்கின்ற நின் கண்கள்; நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் - நமமால் நயக்கப்பட்டவரது நல்காமையைப் பிறர்க்குச் சொல்லுவ போல நின்றன; இனி நீ ஆற்றல் வேண்டும். (சொல்லுவ போறல்: அதனை அவர் உணர்தற்கு அனுமானமாதல். 'நயந்தவர்க்கு' என்று பாடம் ஓதுவாரும் உளர்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
முன்பு நம்மை விரும்பினவர் நமக்கு அருளாமையைப் பிறர்க்குச் சொல்லுவனபோ லாகாநின்றன: பசப்புற்று நீர்சொரிகின்ற கண்கள். இது தலைமகள் ஆற்றாமை கண்டு இக்கண்ணீர் அலராகா நின்றதென்று அவள் ஆற்றுதற்பொருட்டுத் தோழி கூறியது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
பசந்து பனிவாரும் கண்- பசலையடைதல் மேலும் நீர்வடியும் உன் கண்கள்; நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்- நம்மால் விரும்பப்பட்டவர் அன்பு செய்யாமையைப் பிறருக்குச் சொல்வன போலாகின்றன. ஆதலால் நீ ஆற்றல் வேண்டும். சொல்லுவ போலுதல் அதனை அவருய்த் துணருமாறு நிலைமை கெடுதல். நயந்தவர்க்கு என்று பாடமோதுவாரு முளர்.
|
|
கலைஞர் உரை:
|
|
பசலை நிறம் கொண்டு நீர் பொழியும் கண்கள், விரும்பிய காதலர் அன்பு காட்டவில்லை யென்பதை சொல்லி காட்டுகின்றன.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பசந்து, நீர் சிந்தும் கண்கள், நான் விரும்பியவர் என்னை விரும்பவில்லை என்பதைப் பிறர்க்குச் சொல்லும் போலும்!.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அது மட்டுமன்றி,) என்னுடைய கண்கள் என் காதலர் இன்னும் வரவில்லை யென்பதை ஊராருக்கு அறிவிப்பன போலப் பசந்து கண்ணீர் வடித்து அழுதுகொண்டே யிருக்கின்றன.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பசப்பு நிறமடைந்து நீர் பொழுகின்ற கண்கள் தம்மால் அன்பு செய்யப்பட்டவரது அன்பில்லாத் தன்மையினைப் பிறர்க்குச் சொல்லுவனபோல் இருக்கின்றன.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
பசலையால் துன்புற்று கண்ணீர் சிந்தும் என் கண்கள், எம் காதலரின் அன்பு காட்டா நிலைமையை அனைவருக்கும் சொல்கின்றனவோ?
|
|
Translation
|
|
The eye, with sorrow wan, all wet with dew of tears,
As witness of the lover's lack of love appears.
|
|
Explanation
|
|
The discoloured eyes that shed tears profusely seem to betray the unkindness of our beloved.
|
|
Transliteration
|
|
Nayandhavar Nalkaamai Solluva Polum
Pasandhu Panivaarum Kan
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|