|
காதலரால் விரும்பப்படுகின்றவர்க்கும் ( பிரிவுத் துன்பம் இருந்தாலும்) மீண்டும் வந்தபின் வாழ்வோம் என்று இருக்கும் செருக்குத் தகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(இதுவும் அது.) வீழுநர் வீழப்படுவார்க்கு அமையுமே - தாம் விழையும் கணவரான் விழையப்படும் மகளிர்க்கு ஏற்புடைத்து ; வாழுநம் என்னும் செருக்கு - காதலர் பிரிந்தாராயினும் நம்மை நினைந்து கடிதின் வருவர்; வந்தால் நாம் இன்புற்று வாழ்தும் என்றிருக்கும் தருக்கு. ('நாம் அவரான் வீழப்படாமையின், நமக்கு அமைவது இறந்துபாடு' என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தாம் காதலித்தாரால் காதலிக்கப்படுவார்க்கு உலகின்கண் இருந்து உயிர்வாழ்வேமென்னுங் களிப்பு அமையும். இது, தலைமகள், இருந்தாலும் பயனில்லை: அதிற்சாதல் அமையுமென்று வாழ்க்கையை முனிந்து தோழிக்குக் கூறியது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
வாழுநம் என்னும் செருக்கு-நம் காதலர் பிரிந்தாராயினும் நம்மை நினைந்து விரைந்து வருவர், அதன்பின் இன்புற்று வாழ்வோ மென்னும் மிடுக்கு; வீழுநர் வீழப்படுவார்க்கே அமையும்-தாம் காதலிக்குங் கணவராற் காதலிக்கப் பெறும் மகளிர்க்கே அமைவதாம். நாம் அவராற் காதலிக்கப் பெறாமையின் நமக்கு அஃதில்லை யென்பதாம். ஏகாரம் பிரித்துக் கூட்டப்பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
காதலன்பில் கட்டுண்டு பிரியாமல் இணைந்திருப்பவர்களுக்குத்தான் இன்புற்று வாழ்கிறோம் எனும் பெருமிதம் ஏற்படும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
தாம் விரும்பும் கணவனால் விரும்பப்பட்ட பெண்ணுக்கே (எப்படியும் விரைவில் அவர் வருவார் என்ற உறுதியினால்) வாழ்வோம் என்னும் செருக்கு, பொருத்தமாக இருக்கும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
தான் காதலிக்கிற கணவனால் தானும் காதலிக்கப்படுகிற பெண்ணுக்குத்தான் 'நல்வாழ்வு பெற்றேன்' என்று சொல்லிக் கொள்ளும் பெருமை கிடைக்கும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தாம் காதலிக்கும் தலைவரால் காதலிக்கப்படும் மகளிர்க்குப் பொருத்தமானது என்னவென்றால் காதலர் பிரிந்திருந்தாராயினும் நம்மை நினைத்து விரைவில் வருவார். வந்தால் நாம் இன்புற்று வாழ்வோம் என்று இருக்கின்ற செருக்காகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
தம்மால் விரும்பப்படுபவர் தம்மை விரும்புகின்றபொழுது வாழ்வில் நிறைவெய்திய பெருமிதம் ஒருவர்க்குத் தானே அமையும்.
|
|
Translation
|
|
Who love and are beloved to them alone
Belongs the boast, 'We've made life's very joys our own.'.
|
|
Explanation
|
|
The pride that says "we shall live" suits only those who are loved by their beloved (husbands).
|
|
Transliteration
|
|
Veezhunar Veezhap Patuvaarkku Amaiyume
Vaazhunam Ennum Serukku
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|