|
காதலர் எப்போதும் என் உள்ளத்தில் மகிழ்ந்து வாழ்கின்றார், ஆனால் அதை அறியாமல் பிரிந்து வாழ்கின்றார், அன்பில்லாதவர் என்று இந்த ஊரார் அவரைப் பழிப்பர்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(இதுவும் அது.) என்றும் உள்ளத்துள் உவந்து உறைவர் - காதலர் எஞ்ஞான்றும் என் உள்ளத்துள்ளே உவந்து உறையா நிற்பர்; இகழ்ந்து உறைவர் ஏதிலர் என்னும் இவ்வூர் - அதனை அறியாது அவரைப் பிரிந்து உறையா நின்றார், அன்பிலர் என்று சொல்லாநிற்கும் இவ்வூர். ('உவந்து உறைவர்' என்றதனால் அன்புடைமை கூறினாள். 'பிரியாமையும் அன்பும் உடையாரை இலர் எனப் பழிக்கற்பாலையல்லை' என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
அவர் எனது நெஞ்சத்தே என்றும் மகிழ்ந்து உறையாநிற்பர்; அவரை ஏதிலராய் நீங்கி யுறைவர் என்றே சொல்லா நின்றது இவ்வூர். தலைமகள் வேறுபாடுகண்டு தலைமகனை அன்பிலாரென்று இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் என்னெஞ்சில் நின்று நீங்காரென்று நெஞ்சின்மேல் வைத்துக் கூறியது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
என்றும் உள்ளத்துள் உவந்து உறைவர் - என் காதலர் எப்போதும் என் உள்ளத்துள் மகிழ்ந்து வதிகின்றார் ; ஏதிலர் இகந்து உறைவர் என்னும் இவ்வூர் - இதனை யறியாது . அவர் அன்பிலரென்றும் , பிரிந்து வேறிடத்து வதிகின்றாரென்றும் , பழித்துரைக்கும் இவ்வூர் .
|
|
கலைஞர் உரை:
|
|
காதலர், எப்போதும் உள்ளதோடு உள்ளமாய் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, அதை உணராத ஊர்மக்கள் அவர்கள் ஒருவரையொருவர் பிரிந்து வாழ்வதாகப் பழித்துரைப்பது தவறு.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
என்னவர் எப்போதும் என் நெஞ்சிற்குள்ளேயே மகிழ்ந்து இருக்கிறார். இதை அறியாத உறவினர் அவருக்கு அத்தனை அன்பு இல்லை என்கின்றனர்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஏன் ஊரார் அவரை இப்படி நிந்திக்க வேண்டும்? அவர் என்னைத் துறந்துவிட்டா போய்விட்டார்?) எப்போதும் என் மனத்தில் மகிழ்ச்சியோடு தங்கியிருக்கும் என் காதலரை அவர் என்னைப் பிரிந்து போய்விட்டாரென்றும், என்மீது அன்பில்லாதவரென்றும் இந்த ஊரார் சொல்லுகிறார்களே! என்ன அறியாமை இவர்களுக்கு!
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
காதலர் எக்காதலத்திலும் என் உள்ளத்துள்ளே மனமகிழ்ந்து தங்கியிருக்கின்றார். அதனை அறியாமல் அவர் பிரிந்திருக்கின்றார் - அன்பில்லாதவர் - என்று இவ்வூர் சொல்லும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
என் உள்ளத்துள் எப்போதுமே இவர் இருக்கிறார். அதை அறிவாரோ இவ்வூர்மக்கள். என்னை அவர் பிரிந்து சென்று விட்டார் என்று கூறுகின்றனர்.
|
|
Translation
|
|
Rejoicing in my very soul he ever lies;
'Her love estranged is gone far off!' the village cries
|
|
Explanation
|
|
My lover dwells in my heart with perpetual delight; but the town says he is unloving and (therefore) dwells afar.
|
|
Transliteration
|
|
Uvandhuraivar Ullaththul Endrum Ikandhuraivar
Edhilar Ennum Iv Voor
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|