|
கயவரும் தேவரைப் போல் தான் விரும்புகின்றவைகளைச் செய்து மனம் போன போக்கில் நடத்தலால், கயவர் தேவரைப் போன்றவர்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
தேவர் அனையர் கயவர் - தேவரும் கயவரும் ஒரு தன்மையர்; அவரும் தாம் மேவன செய்து ஒழுகலான் - அஃது யாதினான் எனின், தேவரைப் போன்று தம்மை நியமிப்பாரின்றிக் கயவரும் தாம் விரும்புவனவற்றைச் செய்தொழுகலான். (உணர்ச்சியும் இழிவுமாகிய தம் காரண வேறுபாடு குறிப்பால் தோன்ற நின்றமையின், இது புகழ்வார் போன்று பழித்தவாறாயிற்று. இதனான், விலக்கற்பாடின்றி வேண்டிய செய்வர் என்பது கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
கயவர் தேவரை யொப்பவர்: அத்தேவரும் இக்கயவரைப் போலத் தாம் வேண்டியன செய்தொழுகுவராதலான். இது கயவர் வேண்டியன செய்வாரென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
கயவர் தேவர் அனையர் - கயவர் தேவரை யொத்தவர்; அவரும் தாம் மேவன செய்து ஒழுகலான் - அவரும் தேவரைப்போல முழுவுரிமையுடையவராய்த் தாம் விரும்பியவற்றை யெல்லாம் செய்து முடித்தலால். தேவர்க்குங் கயவர்க்குமுள்ள ஒப்புமை வினையியல்பு பற்றாது அதன் முடிப்புப் பற்றியதாம். இதுவும் வஞ்சகப்புகழ்ச்சி.உம்மை எச்சம்.
|
|
கலைஞர் உரை:
|
|
புராணங்களில் வரும் தேவர்களைப் போல் மனம் விரும்பியதையெல்லாம் செய்யக்கூடியவர்கள் கயவர்கள் என்பதால், இருவரையும் சமமாகக் கருதலாம்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
தம்மைக் கட்டுப்படுத்துவார் இல்லாமல் தாம் விரும்பியபடி எல்லாம் செய்து வாழ்வதால், கயவர் தேவரைப் போன்றவராவர்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
மற்றெந்த நியாயங்களையும் கவனிக்காமல் தாம் இச்சைப்பட்டதை யெல்லாம் செய்து மறைந்து திரியும் காரணத்தால் கயவர் என்ற அவர்களும் தேவர்களுக்குச் சமானம் (என்றே சொல்லலாம்)
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
சுயவரும் தாம் விரும்பியவாறு தேவரைப் போலத் தம்மை நியமிப்பாரின்றி விரும்பியவற்றைச் செய்வதால், கயவரும் தேவரும் ஒரு தன்மையராவர்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
கயவர் தேவர்களைப் போன்றவர்கள் ஏனெனில் தன் மனம் போன போக்கிலே யாரிடமும் எதையும் கேட்காமல் செயல் படுவார்கள்.
|
|
Translation
|
|
The base are as the Gods; they too
Do ever what they list to do!.
|
|
Explanation
|
|
The base resemble the Gods; for the base act as they like.
|
|
Transliteration
|
|
Thevar Anaiyar Kayavar Avarundhaam
Mevana Seydhozhuka Laan
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|