|
வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
இன்மையின் இன்னாதது யாது எனின் - ஒருவனுக்கு வறுமை போல இன்னாதது யாது என்று வினவின்; இன்மையின் இன்னாதது இன்மையே - வறுமை போல இன்னாதது வறுமையே, பிறிதில்லை. (இன்னாதது - துன்பஞ்செய்வது. ஒப்பது இல்லை எனவே, மிக்கது இன்மை சொல்ல வேண்டாவாயிற்று)
|
|
மணக்குடவர் உரை:
|
|
நல்குரவுபோல இன்னாதது யாதெனின் நல்குரவுபோல இன்னாதது தானே. (தானே - நல்குரவே). இது தன்னை யொத்த இன்னாதது பிறிதில்லை யென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
இன்மையின் இன்னாதது யாது எனின்- ஒருவனுக்கு வறுமையைப் போலத் துன்பந்தருவது எதுவென்று வினவின்; இன்மையின் இன்னாதது இன்மையே- வருமையைப் போலத் துன்பந்தருவது வறுமையே, வேறொன்றுமில்லை. ஒப்பதின்மை மிக்க தின்மையையும் உடனுணர்த்திற்று. இதில் வந்துள்ள சொல்லணி சொற்பொருட் பின் வருநிலை; பொருளணி தன்னுவமை.
|
|
கலைஞர் உரை:
|
|
வறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத் துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
இன்மையை விடக் கொடியதுஎது என்றால், இல்லாமையை விடக் கொடியது இல்லாமையே.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
வறுமையைப்போல் துன்பப்படுத்துவது எதுவென்றால், ஒருவனுக்கு எப்பொருளும் இல்லாதபடி துன்பப்படுத்தும் அவ்வறுமையேதான்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஒருவனுக்கு வறுமையினைப் போல் துன்பம் தருவது யாது என்று வினவினால், வறுமைபோலத் துன்பம் தருவது வறுமையேயாகும். பிறிது யாதும் இல்லை எனலாம்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஒருவருக்கு வறுமையைக் காட்டிலும் துன்பம் தருவது யாதெனின், வறுமையைக் காட்டிலும் துன்பம் தருவது வறுமையே ஆகும்.
|
|
Translation
|
|
You ask what sharper pain than poverty is known;
Nothing pains more than poverty, save poverty alone.
|
|
Explanation
|
|
There is nothing that afflicts (one) like poverty.
|
|
Transliteration
|
|
Inmaiyin Innaadhadhu Yaadhenin Inmaiyin
Inmaiye Innaa Thadhu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|