Thirukural

ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்லநாணுடைமை மாந்தர் சிறப்பு.

உணவும், உடையும் எஞ்சி நிற்கும் மற்றவையும், எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை, மக்களின் சிறப்பியல்பாக விளங்குவது நாணுடைமையே ஆகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல - ஊணும் உடையும் அவை யொழிந்தனவும் மக்களுயிர்க்கெல்லாம் பொது; மாந்தர் சிறப்பு நாண் உடைமை - நன்மக்கட்குச் சிறப்பாவது நாணுடைமையே, அவையல்ல. (ஒழிந்தன - உறக்கமும் அச்சமும் காமமும். சிறப்பு - அவ்வுயிர்களின் வேறுபாடு. 'அச்சம்' என்று பாடமோதுவாரும் உளர்.)
மணக்குடவர் உரை:
உணவும் உடையும் ஒழிந்தனவும் புன்மக்க ளெல்லார்க்கும் வேண்டும்; தலைமக்களுக்கு விசேடமாக வேண்டுவது நாணுடைமை. இது நாணம் வேண்டுமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல - உணவும் உடையும் அவை யொழிந்த பிறவும் மக்களுயிர்க் கெல்லாம் பொதுவாக வுரியனவாம்; நாண் உடைமை மாந்தர் சிறப்பு- ஆயின், நாணுடைமையோ நன்மக்கட்கே சிறப்பாக வுரியதாம். ஊணுடையொழிந்தன அணி மனை பேச்சு கல்வி முதலியன.'அச்சம் ' என்னும் பாடம் சரியானதன்று.
கலைஞர் உரை:
உடை போன்ற அனைத்தும் எல்லோருக்கும் பொதுவான தேவைகளாக அமைகின்றன; ஆனால் சிறப்புக்குரிய தேவையாக இருப்பது, பிறரால் பழிக்கப்படும் செயல்களைத் தவிர்த்து வாழும் நாணுடைமைதான்.
சாலமன் பாப்பையா உரை:
உணவு, உடை இன்னும் பிற சிறப்புகள், எல்லா மனிதர்க்கும் ஒன்றே; நல்ல மனிதர்க்குச் சிறப்பாவது நாண் உடைமையே.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(மனிதருக்குச் சிறப்புத் தருவது அந்த நாணுடைமைதான்.) எல்லா மனிதர்களுக்கும் உணவு, உடை முதலிய மற்றவைகள் ஒரே மாதிரிதான்.ஆனால் மனிதர்களைச் சிறப்புக்களில் வேறுபடுத்துவது நாணுடைமை என்னும் பழிக்கஞ்சும் குணந்தான்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
உணவும் உடையும் மற்றவைகளும் எல்லா உயிர்களுக்கும் பொதுவேயாகும். நன்மக்களுக்குச் சிறப்பானது நாணமுடைமையேயாகும்; மற்றவையல்ல என்பதாம்.
தமிழ்க்குழவி உரை:
உண், உடை, எச்சம் இவைஎல்லாம் உலகில் எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை. ஆனால் பழிகளுக்கு அஞ்சும் பண்பே மாந்தர் என்னும் சிறப்பைத் தருவது.
Translation
Food, clothing, and other things alike all beings own; By sense of shame the excellence of men is known.
Explanation
Food, clothing and the like are common to all men but modesty is peculiar to the good.
Transliteration
Oonutai Echcham Uyirkkellaam Veralla Naanutaimai Maandhar Sirappu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1012