|
மாசற்ற குடிப் பண்புடன் வாழ்வோம் என்று கருதி வாழ்வோர், வஞ்சனைக் கொண்டு தகுதியில்லாதவற்றைக் செய்யமாட்டார்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
மாசு அற்ற குலம் பற்றி வாழ்தும் என்பார் - வசையற்று வருகின்ற நம் குடிமரபினோடு ஒத்து வாழக் கடவேம் என்ற கருதி அவ்வாறு வாழ்வோர்; சலம் பற்றிச் சால்பு இல செய்யார் - வறுமையுற்றவழியும், வஞ்சனையைப் பொருந்தி, அமைவிலவாய தொழில்களைச் செய்யார். (அமைவின்மை அம் மரபிற்கு ஏலாமை. இவை மூன்று பாட்டானும் அவர் வறுமையுற்ற வழியும் அவ்வியல்பின் வேறுபடார் என்பது கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
பொய்யைச் சார்ந்து அமைவில்லாதன செய்யார், குற்றமற்ற குலத்தைச் சார்ந்து உயிர்வாழ்வோ மென்று கருதுவார். இது சான்றாண்மை விடார் என்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
மாசு அற்ற குலம்பற்றி வாழ்தும் என்பார் - வசையற்று வருகின்ற எங்குடி மரபோ டொத்து ஒழுகக் கடவேம் என்னும் பூட்கை கொண்டவர். சலம்பற்றிச் சால்பு இல செய்யார் - வறுமை வந்தவிடத்தும் வஞ்சனையைக் கையாண்டு சான்றாண்மையொடு பொருந்தாத செயல்களைச் செய்யார். பூட்கை பூணுங்கொள்கை. இம்முன்று குறளாலும் குடிப்பிறந்தார் வறுமையுற்றபோதும் தங்குடிப் பண்பிற் குன்றாரென்பது கூறப்பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
மாசற்ற பண்புடன் வாழ்வதாகக் கருதிக்கொண்டிருப்பவர்கள், வஞ்சக நினைவுடன் தகாத காரியங்களில் ஈடுபடமாட்டார்கள்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
குற்றம் இல்லாமல் வரும் தம் குடும்ப மரபோடு வாழ்வோம் என்பவர், வறுமை வந்தபோதும், வஞ்சகம் கொண்டு, பொருந்தாத செயல்களைச் செய்யமாட்டார்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(பிறர் தமக்குத் தீமை செய்துவிட்டாலும்) குற்றமற்ற தம்முடைய இனமரபைப் பின்பற்றி வாழும் குடிப்பிறந்தார் ஒருவர் மீது தமக்குள்ள கோபத்தின் காரணமாக முறை தவறியும் எதையும் செய்துவிட மாட்டார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
குற்றமின்றி வருகின்ற தமது குடிமரபினோடு ஒத்து வாழக் கடவோம் என்று வாழ்பவர்கள் வறுமையுற்ற காலத்திலும் வஞ்சனையால் தமக்குப் பொருந்தாத செயல் களைச் செய்ய மாட்டார்கள்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
குற்றம் புரியாத நற்குடிப் பெருமையுடன் வாழ நினைப்பவர்கள், வஞ்சகமான தரம் தாழ்ந்த செயல்களைச் செய்வது இல்லை.
|
|
Translation
|
|
Whose minds are set to live as fits their sire's unspotted fame,
Stooping to low deceit, commit no deeds that gender shame.
|
|
Explanation
|
|
Those who seek to preserve the irreproachable honour of their families will not viciously do what is detrimental thereto.
|
|
Transliteration
|
|
Salampatrich Chaalpila Seyyaarmaa Satra
Kulampatri Vaazhdhum En Paar
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|