|
தம்மிடத்தில் உள்ளக் குற்றத்தை அறிந்து நீக்காத போது , உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும், ஆடையால் மறைத்தல் புல்லறிவாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
தம் வயின் குற்றம் மறையாவழி - புல்லறிவாளர் தம்கண் நிகழும் குற்றங்களை அறிந்து கடியாராயின்; அற்றம் மறைத்தலோ புல்லறிவு - ஆடையால் அற்றம் மறைத்தாராகக் கருதுதலும் புல்லறிவாம். (குற்றம் மறைத்தலாவது, அவற்றை இலவாக்குதல். மறைக்கப்படுவன பலவற்றுள்ளும் உயர்ந்தவற்றை எல்லாம் மறையாது தாழ்ந்த தொன்றனையே மறைத்து, அவ்வளவால் தம்மையும் உலக ஒழுக்கினராக மதித்தலும் புல்லறிவென்பதாம். இவை மூன்று பாட்டானும் அவர் தம்மை வியத்தற்குற்றம் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தம்பாலுள்ள குற்றத்தைப் பிறரறியாமல் தாம் மறையாத காலத்துப் பிறர் காணாமல் மறைக்க வேண்டும் உறுப்பை ஆடையால் மறைத்தலும் புல்லறிவு. எனவே, அதுவும் மறையானாயின் குற்றம் நாடுவாரில்லை யென்றவாறாயிற்று. இது குற்றமறையாமை புல்லறிவென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
தம் வயின் குற்றம் மறையாவழி- புல்லறிவாளர் தம்மிடத்துள்ள குற்றங்களை நீக்காவிடத்து; அற்றம் மறைத்தலோ புல் அறிவு- தம் மரும வுறுப்புக்களை மட்டும் ஆடையால் மறைத்துக்கொள்ளுதல் சிற்றறிவாம். 'அற்றம்' ஆடையற்ற நிலை . மறைத்தல் இரண்டனுள் முன்னது கண்ணிற்குத் தோன்றாதவாறு செய்தல்; பின்னது இல்லாதவாறு செய்தல் . அற்றம் மறைத்தலினும் குற்றம் மறைத்தலே உயர்திணை மாந்தனுக்கு இன்றியமையாத தென்பது கருத்து. ஓகாரம் பிரிநலை.
|
|
கலைஞர் உரை:
|
|
நமது குற்றத்தை உணர்ந்து அதை நீக்காமல் உடலை மறைக்க மட்டும் உடை அணிவது மடமையாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
தம்மிடம் உள்ள குற்றத்தை அறிந்து அதைப் போக்காதவர், ஆடையால் தம்உடம்பை மறைக்கக் கருதுவதும் அறிவின்மையே.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
புல்லறிவாளன் தனக்குப் பழக்கமில்லாத வேலையைப் பழகியிருப்பதாகச் சொல்லிவிட்ட பொய்யை மறைக்க முயலும் மாதிரியே, அவனிடத்திலுள்ள, மற்ற எல்லாக் குற்றங்களும் வெளியாகிவிட வழி உண்டாகும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
புல்லறிவாளர்கள் தம்மிடத்தில் நிகழும் குற்றங்களை நீக்காவிட்டால், ஆடைகளினால் மறைக்க வேண்டிய உறுப்புக்களை மறைத்தலும் அற்ப அறிவே யாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
தான் செய்யும் குற்றங்களைத் தவிர்த்து விடாமல், ஒருவன் அதன் விளைவுகளைத் தவிர்க்க முயலுதல் அறியாமை ஆகும்.
|
|
Translation
|
|
Fools are they who their nakedness conceal,
And yet their faults unveiled reveal.
|
|
Explanation
|
|
Even to cover one's nakedness would be folly, if (one's) faults were not covered (by forsaking them).
|
|
Transliteration
|
|
Atram Maraiththalo Pullarivu Thamvayin
Kutram Maraiyaa Vazhi
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|