|
பகைவர் வணங்கித் தொழுத கையினுள்ளும் கொலைக்கருவி மறைந்திருக்கும், பகைவர் அழுதுசொரிந்த கண்ணீரும் அத்தன்மையானதே.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
ஒன்னார் தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் - ஒன்னார் குறிப்பை உணர வல்லார்க்கு அவர் தொழுத கையகத்தும் படைக்கலம் மறைந்திருக்கும்: அழுத கண்ணீரும் அனைத்து - அவர் அழுத கண்ணீரும் அவ்வாறே அது மறைந்திருத்தற்கு இடனாம். '(தாம் நட்பு என்பதனைத் தம் கையானும் கண்ணானும் தேற்றிப் பின் தேற்றுகின்ற பொழுதே அவற்றுள்ளே தோன்றும் என்பார். 'ஒடுங்கும்' என்றார். பகைவர் தம் மென்மை காட்டித் தொழினும், அழினும், அவர் குறிப்பையே நோக்கிக் காக்க என்பதாம். இதனான் 'அவரைச் செயலால் தெளியற்க'' என்பது கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தொழுதகையுள்ளும் கொலைக்கருவி ஒடுங்கும்: பகைவர் அழுதகண்ணீரும் அத்தன்மையதாமென்று கொள்க. மெல்லியராகத் தொழுதுவந்து ஒத்தார்போல ஒழுகுவாரது நட்பென்றவாறு. இது கூடாநட்பினால்வருங் குற்றங் கூறிற்று. கூடா நட்பினர் வேறு காலத்தினும் அழுதகாலத்தினும் தேறப்படாரென்க.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
ஒன்னார் தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் - பகைவரின் குறிப்புணர வல்லார்க்கு அவர் கும்பிட்ட கைக்குள்ளும் கொல்படைக்கலம் மறைந்திருக்கும்; அழுத கண்ணீரும் அனைத்து - அவர் அழுது வடித்த கண்ணீர்க்குள்ளும் அங்ஙனமே மறைந்திருக்கும். கொல்லுதற்குப் பின்பு எடுக்க விருக்கும் படைக்கலம் முன்பு கை குவிப்பாலும் கண்ணீர் வடிப்பாலும் மறைக்கப்படுவதால் அவற்றிற்குள் 'படையொடுங்கும்' என்றார். தம் இளக்கங்காட்டி அழுதாலும் தொழுதாலும், அவர் செயலானன்றிக் குறிப்பாலேயே அவரியல்பை யறிந்து காத்துக்கொள்க வென்பதாம்
|
|
கலைஞர் உரை:
|
|
பகைவர்கள் வணங்குகின்ற போதுகூட அவர்களின் கைக்குள்ளே கொலைக்கருவி மறைந்திருப்பது போலவே, அவர்கள், கண்ணீர் கொட்டி அழுதிடும் போதும் சதிச்செயலே அவர்களின் நெஞ்சில் நிறைந்திருக்கும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பகைவர் தொழும் கைக்குள்ளும் ஆயுதம் மறைந்திருக்கும்; அவர் அழுது சிந்தும் கண்ணீரும் அப்படிப்பட்டதே
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அவர்களுடைய சொல் வணக்கமுள்ளதாக இருப்பது மட்டுமல்லாமல் அவர்களுடைய உடலும் வணங்கிக் கைகளும் கும்பிடும்; கண்ணீரும் விடுவார்கள். ஆனால்) பகைவர்கள் கும்பிடுவதற்குக் கூப்புகின்ற கைகளுக்குள்ளேயும் கொலைக் கருவி மறைத்து வைக்கப்பட்டிருக்கும். அவர்கள் அழுது வடிக்கின்ற கண்ணீரிலும் கெட்ட எண்ணம் மறைந்திருக்கும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பகைவர்கள் தொழுத கையினுள்ளும் படைக் கலம் மறைந்திருக்கும். அப்பகைவர் அழுத கண்ணீரும் அவ்வாறே அது மறைந்திருப்பதற்கு இடமானதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
பகைவர்கள் கைகுவித்து வணங்கும் பொழுதுகூட கைகளுக்குள் கொலைக்கருவி மறைந்திருக்கும் அதுபோலவே அவர்கள் சிந்துகிற கண்ணீரும்.
|
|
Translation
|
|
In hands that worship weapon ten hidden lies;
Such are the tears that fall from foeman's eyes.
|
|
Explanation
|
|
A weapon may be hid in the very hands with which (one's) foes adore (him) (and) the tears they shed are of the same nature.
|
|
Transliteration
|
|
Thozhudhakai Yullum Pataiyotungum Onnaar
Azhudhakan Neerum Anaiththu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|