Thirukural

அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்தவன்க ணதுவே படை.

(போர் முனையில்) அழிவு இல்லாததாய்(பகைவருடைய) வஞ்சனைக்கு இரையாகாததாய், தொன்று தொட்டுவந்த அஞ்சாமை உடையதே படையாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
அழிவு இன்றி - போரின்கண் கெடுதல் இன்றி; அறை போகாதாகி - பகைவரால் கீழறுக்கப்படாததாய்: வழிவந்த வன்கணதுவே படை - தொன்று தொட்டு வந்த தறுகண்மையை உடையதே அரசனுக்குப் படையாவது. (அழிவின்மையான் மற மானங்கள் உடைமையும், அறை போகாமையான் அரசர்மாட்டு அன்புடைமையும் பெறப்பட்டன. வழி வந்த வன்கண்மை, 'கல்நின்றான் எந்தை கணவன் களப்பாட்டான், முன்னின்று மொய்யவிந்தார் என்ஐயர் - பின்னின்று, கைபோய்க் கணையுதைப்பக் காவலன் மேலோடி எய்போற் கிடந்தான் என் ஏறு'. (பு.வெ.மா.வாகை,22) என்பதனான் அறிக. குற்றியலுகரத்தின் முன்னர் உடம்படுமெய் விகாரத்தான் வந்தது. இது வருகின்ற பாட்டுள்ளும் ஒக்கும்.)
மணக்குடவர் உரை:
கெடுதலின்றிக் கீழறுக்கப்படாததாகிக் குலத்தின் வழிவந்த அஞ்சாமையையுடையதே படையாவது. வழிவருதல்- வீரன்மகன் வீரனாகுதல். இது படையினது நன்மைகூறிற்று
தேவநேயப் பாவாணர் உரை:
கெடுதலின்றிக் கீழறுக்கப்படாததாகிக் குலத்தின் வழிவந்த அஞ்சாமையையுடையதே படையாவது. வழிவருதல்- வீரன்மகன் வீரனாகுதல். இது படையினது நன்மைகூறிற்று
கலைஞர் உரை:
எந்த நிலையிலும் அழியாததும், சூழ்ச்சிக்கு இரையாகாததும், பரம்பரையாகவே பயமற்ற உறுதி உடையதும்தான் உண்மையான படை எனப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
போரில் தோற்காமலும், பகைவரின் சதிக்குத் துணை போகாமலும், தொன்று தொட்டு வரும் வீரத்தை உடையதே படை
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அதனால்) அணி வகுப்புக் கலையாமலும் பகைவர் களுடைய பயமுறுத்தலுக்கு அஞ்சி ஓடிவிடாமலும் இருக்கப் பயிற்சி கொடுக்கப்பட்டு உண்டாகிற மன உறுதியுடையதே சேனை எனப்படும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
போரில் கெடுதல் இல்லாமல், பகைவரால் கீழறுக்கப்படாததாகித் தொன்றுதொட்டு வந்த வலிமை யினையுடையதே அரசனுக்குப் படையாவ தாகும்.
தமிழ்க்குழவி உரை:
மனத்தளர்வு இன்றி, காட்டிக் கொடுத்தல் ஆகிய வஞ்சனைக் காளாகாமல் வழிவழியாக வந்த ஆற்றல் மிக்கதுவே நல்லபடை.
Translation
That is a host, by no defeats, by no desertions shamed, For old hereditary courage famed.
Explanation
That indeed is an army which has stood firm of old without suffering destruction or deserting (to the enemy).
Transliteration
Azhivindri Araipokaa Thaaki Vazhivandha Vanka Nadhuve Patai

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 764