|
(போர் முனையில்) அழிவு இல்லாததாய்(பகைவருடைய) வஞ்சனைக்கு இரையாகாததாய், தொன்று தொட்டுவந்த அஞ்சாமை உடையதே படையாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
அழிவு இன்றி - போரின்கண் கெடுதல் இன்றி; அறை போகாதாகி - பகைவரால் கீழறுக்கப்படாததாய்: வழிவந்த வன்கணதுவே படை - தொன்று தொட்டு வந்த தறுகண்மையை உடையதே அரசனுக்குப் படையாவது. (அழிவின்மையான் மற மானங்கள் உடைமையும், அறை போகாமையான் அரசர்மாட்டு அன்புடைமையும் பெறப்பட்டன. வழி வந்த வன்கண்மை, 'கல்நின்றான் எந்தை கணவன் களப்பாட்டான், முன்னின்று மொய்யவிந்தார் என்ஐயர் - பின்னின்று, கைபோய்க் கணையுதைப்பக் காவலன் மேலோடி எய்போற் கிடந்தான் என் ஏறு'. (பு.வெ.மா.வாகை,22) என்பதனான் அறிக. குற்றியலுகரத்தின் முன்னர் உடம்படுமெய் விகாரத்தான் வந்தது. இது வருகின்ற பாட்டுள்ளும் ஒக்கும்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
கெடுதலின்றிக் கீழறுக்கப்படாததாகிக் குலத்தின் வழிவந்த அஞ்சாமையையுடையதே படையாவது. வழிவருதல்- வீரன்மகன் வீரனாகுதல். இது படையினது நன்மைகூறிற்று
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
கெடுதலின்றிக் கீழறுக்கப்படாததாகிக் குலத்தின் வழிவந்த அஞ்சாமையையுடையதே படையாவது. வழிவருதல்- வீரன்மகன் வீரனாகுதல். இது படையினது நன்மைகூறிற்று
|
|
கலைஞர் உரை:
|
|
எந்த நிலையிலும் அழியாததும், சூழ்ச்சிக்கு இரையாகாததும், பரம்பரையாகவே பயமற்ற உறுதி உடையதும்தான் உண்மையான படை எனப்படும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
போரில் தோற்காமலும், பகைவரின் சதிக்குத் துணை போகாமலும், தொன்று தொட்டு வரும் வீரத்தை உடையதே படை
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அதனால்) அணி வகுப்புக் கலையாமலும் பகைவர் களுடைய பயமுறுத்தலுக்கு அஞ்சி ஓடிவிடாமலும் இருக்கப் பயிற்சி கொடுக்கப்பட்டு உண்டாகிற மன உறுதியுடையதே சேனை எனப்படும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
போரில் கெடுதல் இல்லாமல், பகைவரால் கீழறுக்கப்படாததாகித் தொன்றுதொட்டு வந்த வலிமை யினையுடையதே அரசனுக்குப் படையாவ தாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
மனத்தளர்வு இன்றி, காட்டிக் கொடுத்தல் ஆகிய வஞ்சனைக் காளாகாமல் வழிவழியாக வந்த ஆற்றல் மிக்கதுவே நல்லபடை.
|
|
Translation
|
|
That is a host, by no defeats, by no desertions shamed,
For old hereditary courage famed.
|
|
Explanation
|
|
That indeed is an army which has stood firm of old without suffering destruction or deserting (to the enemy).
|
|
Transliteration
|
|
Azhivindri Araipokaa Thaaki Vazhivandha
Vanka Nadhuve Patai
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|