|
நல்ல அறிஞரின் அவையில் நல்லப் பொருளைக் கேட்பவர் மனதில் பதியுமாறு சொல்ல முடியாதவர், பல நூல்களைக் கற்றாலும் பயன் இல்லாதவரே.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
நல்லவையுள் நன்கு செலச் சொல்லாதார் - நல்லார் இருந்த அவைக்கண் நல்ல சொற்பொருள்களைத் தம் அச்சத்தான் அவர்க்கு ஏற்கச் சொல்லமாட்டாதார்; பல்லவை கற்றும் பயம் இலரே - பல நூல்களைக் கற்றாராயினும் உலகிற்குப் பயன்படுதல் இலர். (அறிவார் முன் சொல்லாமையின் கல்வியுண்மை அறிவாரில்லை என்பதாம். இனிப் 'பயமிலர்' என்பதற்கு, 'கல்விப் பயனுடையரல்லர்' என்று உரைப்பாரும் உளர்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
பலநூல்களைக் கற்றாலும் ஒருபயனில்லாதவரே: நல்லவையின்கண் நன்றாக அவர்க்கு ஏற்கச் சொல்ல மாட்டாதார். இஃது அவையஞ்சுவார் கற்றகல்வி பிறர்க்குப் பயன்படாதென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
நல் அவையுள் நன்கு செலச் சொல்லாதார்-தாம்கற்ற நல்ல பொருள்களை நல்லறிஞர் இருந்த அவைக்கண் தாம் கொண்ட அச்சத்தினால் அவர்க்கு விளங்குமாறு எடுத்துச் சொல்லும் ஆற்றலில்லாதார்; பல்லவை கற்றும் பயம் இலரே-பல நூல்களைக் கற்றிருந்தாலும் உலகிற்குப் பயன்படாதவரே யாவர். கற்றோர் கல்வியைக் கற்றோரே அறிவராதலின், கற்றோர்முன் சொல்லாத கல்வி தமக்கேயன்றிப் பிறர்க்குப் பயன்படா தென்பதாம். உம்மை உயர்வுசிறப்பு. ஏகாரம் தேற்றம்.
|
|
கலைஞர் உரை:
|
|
அறிவுடையோர் நிறைந்த அவையில், அவர்கள் மனத்தில் பதியும் அளவுக்குக் கருத்துக்களைச் சொல்ல இயலாவிடின், என்னதான் நூல்களைக் கற்றிருந்தாலும் பயன் இல்லை.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நல்லனவற்றை நல்லவர் கூடிய அவையில் அவர் மனங் கொள்ளச் சொல்லத் தெரியாதவர், பலதுறை நூல்களைக் கற்றிருந்தாலும் உலகிற்குப் பயன்படாதவரே.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அதனால்) கற்றவர்கள் கூடிய நல்ல சபையில் நன்றாகப் பேசத் தெரியாதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தாலும் பயனற்றவர்களே யாவார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
நல்லவர்கள் இருந்த அவைக்கண் நல்ல சொற் பொருள் களை ஏற்கும்படி அச்சத்தால் சொல்ல மாட்டா தவர்கள் பல நூல்களைக் கற்றாராயினும் உலகிற்குப் பயனுள்ளவர் ஆகார்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நல்ல அறிஞர்கள் கூடியுள்ள அவையின்கண் தான் கற்றவற்றை நன்கு சொல்லி விளக்க முடியாதவர் பல நூல்கள் கற்றும் பயனில்லாதவரே.
|
|
Translation
|
|
Though many things they've learned, yet useless are they all,
To man who cannot well and strongly speak in council hall.
|
|
Explanation
|
|
Those who cannot agreeably speak good things before a good assembly are indeed unprofitable persons inspite of all their various acquirements.
|
|
Transliteration
|
|
Pallavai Katrum Payamilare Nallavaiyul
Nanku Selachchollaa Thaar
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|