|
நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்கு முன்) நல்ல அறச்செயலை விரைந்து செய்யத்தக்கதாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
நாச் செற்று விக்குள் மேல் வாராமுன் - உரையாடா வண்ணம் நாவை அடக்கி விக்குள் எழுவதற்கு முன்னே; நல்வினை மேற்சென்று செய்யப்படும் - வீட்டிற்கு ஏதுவாகிய அறம் விரைந்து செய்யப்படும். (மேல் நோக்கி வருதல் ஒரு தலையாகலானும், வந்துழிச் செய்தலே அன்றிச் சொல்லும் ஆகாமையானும் 'வாராமுன்' என்றும், அதுதான் இன்னபொழுது வரும் என்பது இன்மையின் 'மேற்சென்று' என்றும் கூறினார். மேற்சேறல் மண்டுதல். நல்வினை செய்யும் ஆற்றின்மேல் வைத்து நிலையாமை கூறியவாறு.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
நாவழங்காமற் செறுத்து விக்குளானது மீதூர்ந்து வருவதன் முன்னே, நல்வினையை மேல் விழுந்து செய்ய வேண்டும்.
இஃது உயிரானது கழிவதன்முன்னே நல்வினையைச் செய்யவேண்டு மென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
நாச் செற்று விக்குள் மேல் வாராமுன் - பேசமுடியாவாறு நாவையடக்கி விக்கல் எழுவதற்கு முன்; நல்வினை மேற்சென்று செய்யப்படும் - இல்லறத்தாரால் விண்ணிற்கும் துறவறத்தாரால் வீட்டிற்கும் ஏற்ற அற வினைகள் விரைந்து செய்யப்படல் வேண்டும்.
நாச்செற்று விக்குள்மேல் வருதல் உயிர் போதற்கடையாளமாம். அன்று செய்தலேயன்றிச் சொல்லுதலும் கூடாமையின் ' வாராமுன் ' என்றும், "ஆறிலுஞ்சாவு நூறிலுஞ்சாவு." ஆதலால் ' மேற்சென்று' என்றுங் கூறினார். நிலையாமை நோக்கி நல்வினை விரைந்து செய்யத் தூண்டியவாறு.
|
|
கலைஞர் உரை:
|
|
வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நம் உயிர் இருக்கும்
போதே உயர்ந்த நற்பணிகளை ஆற்றிட முனைய வேண்டும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நாவை அடைத்து விக்கல் வருவதற்கு முன், நல்ல செயல்களை விரைந்து செய்ய வேண்டும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அப்படி இளமை ஒழிந்து உயிர் போய்விடுவதற்கு முன்) பேச்சு வராதபடி நாக்குக் குழறி மேல்மூச்சு வருவதற்கு முன்னால் புண்ணியங்களைச் செய்ய முந்திக்கொள்ள வேண்டும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பேச முடியாதபடி நாவினை அடக்கி விக்குள் எழுவதற்கு முன்னமேயே அறச் செயலானது விரைவாகச் செய்யப்படுதல் வேண்டும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நாக்கு உட்செல்ல விக்கல் மேல்வர, உயிர் ஒடுங்கும் நேரம் வரை காத்திராமல் அறச் செயல்களை எப்போதும் செய்து கொண்டேயிருக்க வேண்டும்.
|
|
Translation
|
|
Before the tongue lie powerless, 'mid the gasp of gurgling breath,
Arouse thyself, and do good deeds beyond the power of death.
|
|
Explanation
|
|
Let virtuous deeds be done quickly, before the biccup comes making the tongue silent.
|
|
Transliteration
|
|
Naachchetru Vikkulmel Vaaraamun Nalvinai
Mersendru Seyyap Patum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|