Thirukural

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்வழுக்காயும் கேடீன் பது.

பொறாமை உடை‌யவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
ஒன்னார் வழுக்கியும் கேடு ஈன்பது - அழுக்காறு பகைவரைஒழிந்தும் கேடு பயப்பதொன்று ஆகலின்; அழுக்காறு உடையார்க்கு அது சாலும் - அவ்வழுக்காறு உடையார்க்குப் பகைவர் வேண்டா; கேடு பயப்பதற்கு அதுதானே அமையும். ('அதுவே' என்னும் பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது.)
மணக்குடவர் உரை:
அழுக்காறுடையார்க்கு அவ்வழுக்காறு தானே அமையும்: பகைவர் கேடுபயத்தல் தப்பியும் கெடுப்பதற்கு, இஃது உயிர்க்குக் கேடுவருமென்று கூறிற்று.
தேவநேயப் பாவாணர் உரை:
ஒன்னார் வழுக்கியும் கேடு ஈன்பது-பகைவர் கேடு செய்யத் தவறினும் பொறாமை தப்பாது கேடு செய்வதாதலின்; அழுக்காறு உடையார்க்கு அது சாலும் -பொறாமையுள்ளவர்க்குக் கேடு செய்ய அது ஒன்றே போதுமானது; வேறு பகை வேண்டிய தில்லை. உம்மை எதிர்மறைப் பொருட்டு. அதுவே என்னும் பிரிநிலை யேகாரம் தொக்கது.
கலைஞர் உரை:
பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா. அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்.
சாலமன் பாப்பையா உரை:
பொறாமை உடையவர்க்குத் தீமை தரப் பகைவர் வேண்டியதில்லை; பொறாமையே போதும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(வேறு ஒரு குற்றம் செய்யாவிட்டாலும் பொறாமைக் குணமே ஒருவனைக் கெடுத்துவிடும்.) பொறாமைக் குணம் உள்ளவர்களுக்குக் கேடுண்டாக்க அதுவே போதும். பகைவர்களால் கெடுக்க முடியாத வனையும் அது கெடுத்துவிடும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
அழுக்காறு (பொறாமை) உடையவர்களுக்குப் பகைவர்கள் தீமை செய்ய வேண்டுவதில்லை. ஏனெனில், அப்பொறாமைக் குணமே அவர்களை அழிப்பதற்குப் போதுமானதாகும்.
தமிழ்க்குழவி உரை:
பொறாமை குணம் கொண்டவர்களுக்கு துன்பம், அவர் செயல்களாலேயே நிகழ்ந்துவிடும். பகைவர்கள் வந்து தான் கேடு விளைவிக்க வேண்டுமென்பதில்லை.
Translation
Envy they have within! Enough to seat their fate! Though foemen fail, envy can ruin consummate..
Explanation
To those who cherish envy that is enough. Though free from enemies that (envy) will bring destruction.
Transliteration
Azhukkaaru Utaiyaarkku Adhusaalum Onnaar Vazhukkayum Keteen Padhu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 165