|
உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார் - யாவரும் உண்ணும் வகை உழுதலைச் செய்து அதனால் தாமும் உண்டு வாழ்கின்றாரே, தமக்குரியராய் வாழ்கின்றவர்; மற்றெல்லாம் தொழுது உண்டு பின் செல்பவர் - மற்றையாரெல்லாம் பிறரைத் தொழுது, அதனால் தாம் உண்டு அவரைப் பின்செல்கின்றவர். ['மற்று' என்பது வழக்குப்பற்றி வந்தது. தாமும் மக்கட்பிறப்பினராய் வைத்துப் பிறரைத் தொழுது அவர் சில கொடுப்பத் தம் உயிரோம்பி அவர் பின் செல்வார் தமக்குரியரல்லர் என்பது கருத்து.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
உலகின்கண் வாழ்வாராவார் உழுதுண்டு வாழ்பவரே; மற்று வாழ்கின்றா ரெல்லாரும் பிறரைத் தொழுது உண்டு அவரேவல் செய்கின்றவர். இது செல்வமானது உழவினால் வருஞ் செல்வமென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார்- எல்லாரும் உண்ணும் வகை உழவுத் தொழிலைச் செய்து அதனால் தாமும் உண்டு வாழ்பவரே, உரிமையுடன் வாழ்பவராவர்; மற்று எல்லாம் தொழுது உண்டு பின்செல்பவர்- மற்றோரெல்லாம் பிறரை வணங்கி அதனால் உண்டு அவர்பின் செல்லும் அடிமையரே. உழவர் தம் விருப்பப்படியும் பிறர் விருப்பப்டியும் தொழில் செய்பவர் என்பது கருத்து. இது மக்கள் தொகை மிக்க இக்காலத்திற்கு ஏற்காது. தொல்காப்பியர் காலத்தில் அஃறிணையைக் குறித்த எல்லாம் என்னும் சொல் திருவள்ளுவர் காலத்தில் உயர்திணையையுங் குறித்தது வழக்குப் பற்றிய திணை வழுவமைதி. ஏகாரம் பிரிநிலை.
|
|
கலைஞர் உரை:
|
|
உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பிறர்க்காகவும் உழுது தாமும் உண்டு வாழ்பவரே வாழ்பவர். மற்றவர் எல்லாரும் பிறரைத் தொழுது அவர் தருவதை உண்டு தருபவர் பின்னே செல்பவர் ஆவர்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அதனால்) உழவுத் தொழில் செய்து தாமே உற்பத்தி செய்கிற உணவுப் பொருள் கொண்டு சீவிக்கிறவர்களே சுதந்திர வாழ்க்கை நடத்துகிறவர்கள்; மற்றவர்களெல்லாம் பிறரை வணங்கி அவர்கள் தயையினால் உண்டு, அடிமை வாழ்க்கை நடத்து கிறவர்களே யாவார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
உழுதலைச் செய்து தாமும் உண்டு பிறரை யும் வாழ வைத்து வாழ்பவர்களே தமக்கு உரியராய் வாழ் பவராவார், மற்றவரெல்லாரும் பிறரைத் தொழுது தாம் உண்டு அவருக்குப் பின் செல்லுகின்றவராவார்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
உழுது, உண்டு, பிறருக்கும் உதவி வாழ்கின்ற உழவர் பெருமக்களே உண்மையில் வாழ்பவர். மற்றவர்களெல்லாம் அவர்களை நம்பி, அவர்கள் பின் சென்று வாழ்பவரே
|
|
Translation
|
|
Who ploughing eat their food, they truly live:
The rest to others bend subservient, eating what they give.
|
|
Explanation
|
|
They alone live who live by agriculture; all others lead a cringing, dependent life.
|
|
Transliteration
|
|
Uzhudhuntu Vaazhvaare Vaazhvaarmar Rellaam
Thozhudhuntu Pinsel Pavar
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|