|
பிறர்க்கு உதவாத காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவனுடைய செல்வம், ஊர் நடுவில் நச்சு மரம் பழுத்தாற் போன்றது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
நச்சப்படாதவன் செல்வம் - வறியார்க்கு அணியனாயிருந்தும் ஒன்றுங்கொடாமையின் அவரான் நச்சப்படாதவன் செல்வமெய்துதல்; ஊர் நடுவுள் நச்சுமரம் பழுத்தற்று - ஊரிடை நிற்பதோர் நச்சு மரம் பழுத்தாற் போலும். ('நடுவூர்' என்பது பின் முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகை. அண்மை உடைமைகளான் பயனில்லை என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
பிறரால் ஆசைப்படாதவனது செல்வம், ஊர் நடுவுள் பழுத்து நிற்பதொரு நச்சுமரம் பழுத்த தன்மைத்து. இது நச்சுமரப்பழம் தமதாசையாலே தின்பாருண்டாயின் அவரைக் கொல்லுமென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
நச்சப்படாதவன் செல்வம் - வறியவர்க்கு அருகிலிருந்தும் ஒன்றுங் கொடாமையின் அவரால் விரும்பப்படாதவன் செல்வ முடையவனாயிருத்தல்; நடு ஊருள் நச்சு மரம் பழுத்த அற்று- ஊர் நடுவில் எட்டி மரம் பழுத்தாற் போலும். இரண்டும் அருகிலிருந்தும் பயனில்லை யென்பதாம். ' நடுவூர்' என்பது ' புறநகர் ' என்பது போன்ற இலக்கணப் போலி.
|
|
கலைஞர் உரை:
|
|
வெறுக்கப்படுகிறவரிடம் குவிந்துள்ள செல்வமும், ஊர் நடுவே நச்சு மரத்தில் காய்த்துக் குலுங்குகின்ற பழமும் வெவ்வேறானவையல்ல!.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
எவராலும் விரும்பப்படாதவனின் செல்வம் ஊரின் நடுவே நின்ற நச்சு மரம் பழுத்தது போலாம்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
கொடைக் குணம் இல்லாததால் யாராலும் விரும்பப் படாத பணக்காரன் நடு ஊரில் விஷமரம் நிரம்பப் பழுத்திருப் பதற்கே சமானம். (ஊராருடைய வெறுப்புக்கே அவன் ஆளாவான்).
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஈகைத் தன்மை இல்லாததால் ஒருவராலும் விரும்பப்படாத ஒருவன் செல்வம் பெற்றிருத்தலானது, ஊரின் நடுவில் இருக்கும் நச்சுமரம் பழுத்ததைப் போன்றதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
பிறருக்கு உதவாமையால் எவராலும் விரும்பப்படாத ஒருவருடைய செல்வம் நடுவூரில் நச்சுமரம் பழுத்திருப்பதைப் போலாகும்.
|
|
Translation
|
|
When he whom no man loves exults in great prosperity,
'Tis as when fruits in midmost of the town some poisonous tree.
|
|
Explanation
|
|
The wealth of him who is disliked (by all) is like the fruit-bearing of the etty tree in the midst of a town.
|
|
Transliteration
|
|
Nachchap Pataadhavan Selvam Natuvoorul
Nachchu Marampazhuth Thatru
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|